தாலிபனுக்குள் புகுந்த இந்திய உளவு பிரிவு.. அஜித் தோவால் அதிரடியில் டெல்லியில் சிக்கிய 5 தீவிரவாதிகள்..

0
Follow on Google News

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய உளவு பிரிவு ஆப்கனில் அழகாக விளையாடிவருகிறது, இந்திய உளவுதுறை அங்கே தாலிபனுக்குள் புகுந்திருகின்றது, அப்படியே பாகிஸ்தானுக்குள்ளும் ஆப்கனுக்குள்ளும் ஆப்கனை சுற்றியுள்ள தாலிபன் எதிரிகளுக்குள்ளும் ஊடுருவியிருகின்றது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாலிபன் விவகாரத்தை தனியே உளவு என கையாண்டுகொண்டே குவாட் நாடுகளோடு இணைந்து செயல்படுகின்றது.

இது அமெரிக்காவுடன் மிக அணுக்கமான உளவு தகவல்களை பெறுகின்றது, இன்னொரு பக்கம் ஷியா மக்களோடு இணைந்து ஷியாக்கள் மூலம் அவர்கள் எதிரிகளான தாலிபன்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றது. இந்த நுணுக்கமான வலையில்தான் நேற்று டெல்லியில் நாசகாரிகள் 5 பேர் சிக்கியிருக்கின்றார்கள்.

இவர்கள் மிகபெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் இங்கே அனுப்பபட்டவர்கள், ஆயுதமும் ஆட்களும் ரெடியாக இருந்து இலக்கு எது? தாக்குதல் நாள் எது? எனும் உத்தரவு வர காத்திருந்த நிலையில் சிக்கியிருக்கின்றார்கள் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் இவர்கள், உத்தரவுக்காக காத்திருந்த நிலையில் அவர்களுக்கு உத்தரவிடும் கோஷ்டிகளுக்குள்ளே இருந்து தகவலை கடத்தி வந்திருகின்றது இந்தியா

இந்த 5 பேர் போல இன்னும் பலர் இந்தியா முழுக்க பதுங்கியிருக்கலாம் என்கின்றது உளவுதகவல், வேட்டை தொடர்ந்து நடக்கின்றது இந்திய அரசின் மிக கடுமையான கண்காணிப்பால் மிகபெரிய தாக்குதல் முன் கூட்டியே தடுக்கபட்டு தேசம் முழுக்க ரகசிய உஷார் நிலையில் வைக்கபட்டுள்ளது அமெரிக்க சி.ஐ.ஏ போன்ற வலுவான அமைப்புகளுடன் இணைந்து அஜித் தோவால் அசத்திகொண்டிருக்கின்றார். இந்நிலையில்தான் அவரின் வலதுகரமான ரவீந்திர நாராயண் ரவி தமிழக கவர்ணராக சென்னையில் கால் பதிக்க வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. – எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.