குடும்பம் நடத்த மனைவி வரவில்லை… கடைசியில் மது போதையில் பிஞ்சு குழந்தைகள் பலியானது…

0
Follow on Google News

உத்திரப் பிரதேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டுக்கு சென்ற மனைவிடம் குடும்பம் நடத்த வர அழைத்தும் மறுத்ததால் பெற்ற பிள்ளைகளை போதையில் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன். உத்திரப் பிரதேசம் மாநிலம் அனூப்த படி கர் ஃபசல்பூர் பகுதியைச் சேர்ந்த அருண் குமார்.‌ இவருக்கு நிஷு என்ற மனைவியும், 6வயதில் ஷ்ரிஷ்டி, 4வயதில் நைனா என்ற மகள்கள் இருக்கிறார்கள்.

அருண் குமாருக்கும் மனைவி நிஷு இடையே சில கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் நிஷு லோனியில் அவரது பெற்றோர்கள் வீட்டில் தனது மகள்கள் ஷ்ரிஷ்டி, நைனாவுடன் வசித்து வந்தார். கணவன் வந்து அழைத்தாலும் போகக்கூடாது என்று இருந்தார் மனைவி. இந்த நிலையில் லோனியில் உள்ள மனைவியின் நிஷு வீட்டிற்கு மது போதையில் வந்த மனைவி நிஷுவிடம் வீட்டிற்கு வருமாறு தகராறு செய்துள்ளார்.

மனைவி நிஷு வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் அருண் குமார் மனைவிடம் இருந்து இரண்டு குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டார். பிறகு அனூப்த படி கர் ஃபசல்பூர் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். மனைவி மீது உள்ள ஆத்திரத்தில் மது போதையில் தனது குழந்தைகள் என்று கூட பார்க்காமல் ஈவு இரக்கமின்றி கழுத்தை நெரித்து இரு பச்சிளம் குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டார் அருண் குமார்.

இந்த சம்பவம் குறித்து நிலவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனூப்த படி கர் ஃபசல்பூர் வந்து குழந்தை பார்த்து நிஷு கதறி அழுதுள்ளார். அழகான அந்த பச்சிளம் குழந்தைகளை இழந்த அந்த தாயின் அந்த கதறல் சத்தம் அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.