புகைப்படம் எடுக்க வந்த சட்டகல்லுரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கர்பமாக்கிய போட்டோகிராபர்… சிவகங்கையில் பரபரப்பு..

0
Follow on Google News

சிவகங்கை சட்டக்கல்லூரி படிக்கும் இளம் பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல். சிவகங்கை மாவட்டம் காமராஜர் காலனியை சேர்ந்த 25 வயதுடைய சரண்லால். இவர் ஃபோட்டோ ஸ்டூடியோ ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது ஸ்டூடியோவுக்கு அதே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி படிக்கும் மாணவி ஒருவர் புகைப்படம் எடுக்க வந்துள்ளார்.

அப்போது ஸ்டூடியோவுக்கு வந்த இளம் பெண்ணை சரண்லால் அமரவைத்து குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை கூடித்த அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். சரண்லால் அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து உள்ளதால் தான் அந்த இளம்பெண் மயக்கமடைந்துள்ளார். இதான் பிறகு அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி யுள்ளார். அந்த பெண்ணை ஆபாசமாக படம் பிடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் யாரிடமும் சொல்லாத வகையில் அவரை ஆபாசமாக படம் பிடித்ததை காட்டி மிரட்டியுள்ளார். அதோடு நிறுத்தி கொள்ளாமல் அந்த இளம்பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் சம்பவம் குறித்து சிவகங்கை எஸ்பி யிடம் புகார் கொடுத்தார். எஸ்பி சம்பவம் குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, எஸ் ஐ தீவிர விசாரணை செய்து சரண்லால் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். தனிப்படை அமைத்து தீவிர தேடிவந்த நிலையில் சரண்லாலை கைது செய்தனர்.