+2 மாணவியை கர்பமாக்கிய பத்தாம் வகுப்பு மாணவன்… திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்..

0
Follow on Google News

திருச்சியில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அக்காவை கர்ப்பம் ஆக்கிய தம்பி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா வைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பிளஸ்டூ படித்து வருகிறார். இவருக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள இந்த விஷயம் குறித்து குழந்தைகள் மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக இந்த தகவல் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையின் குழந்தை பிறந்து திருச்சி அரசு மருத்துவமனையில் இருக்கும் அந்த சிறுமியை நேரில் சென்று பார்வையிட்டார். பெண் இன்ஸ்பெக்டரின் தீவிர விசாரணைக்கு பிறகு தான் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்காவில் பிளஸ்டூ படித்து வரும் இந்த சிறுமி கடந்த சில மாதங்கள் முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். உறவினருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறார். அந்த உறவினரின் மகன் சிறுமிக்கு தம்பி உறவாம். இவர்கள் இருவரும் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தவறான உறவுகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் எதுவும் கூறாமல் மறைத்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி வர அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறுமி கற்பமாக இருப்பதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். பிறகு அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனார் அனைத்து மகளிர் போலீஸ். கைது செய்யப்பட்ட சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தம்பியால் அக்கா கர்ப்பம் அடைந்த இந்த செய்து முசிறி தாலூக முழுவதும் தீயாய் பரவியது.