இனிமே இந்த பக்கமே வர கூடாது.. கமல்ஹாசன் மீது முட்டை வீசிய இந்தி சினிமாத்துறையினர்.. எதற்கு தெரியுமா.? பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..

0
Follow on Google News

தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நடிகர் கமலஹாசன், அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறு வயதிலே புகழின் உச்சிக்கே சென்றார், மிக குறுகிய காலகட்டத்தில் தனக்கு 25 வயதே ஆன நிலையில் 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார் கமல்ஹாசன்

சினிமா துறையில் இருக்கும் அனைத்து கலையிலும் வல்லமை படைத்தவரான கமல்ஹாசன், கலைத்துறையின் சிவாஜி கணேசன் வாரிசு என போற்றப்பட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் நடித்த கமலஹாசன் 1980 காலகட்டத்தில் இந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினர், அவர் நடிப்பில் இந்தியில் வெளியான ஏக் து ஜே கேலியே திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்று இந்தி சினிமாவில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் அடுத்தடுத்து இந்தியில் நடித்த கமலஹாசன் படங்கள் அணைத்து மிக பெரிய வெற்றியை பெற்றது, இதனை தொடர்ந்து இதற்கு மேல் கமலஹாசன் இந்தியில் நடித்தால், இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வந்து விடுவார் என இந்தி சினிமா துறையில் இருக்கும் முன்னணி நடிகர்கள் திட்டமிட்டுள்ளனர், இதற்கு காரணம் தென் இந்தியாவில் இருந்து நடிகைகளின் வளர்ச்சியை இந்தி சினிமா துறையினர் ஏற்று கொள்வார்கள் ஆனால் நடிகர்களின் வளர்ச்சியை ஏற்று கொள்ள மாட்டார்கள் என சினிமா துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இந்தி சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் யாரும் கமல்ஹாசனை வைத்து படம் எடுக்க கூடாது என அங்கே இந்தி சினிமா துறையை கட்டுக்குள் வைத்திருக்கும் முக்கிய புள்ளிகளிடம் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து கமலஹாசனை வைத்து படம் எடுப்பதை கைவிட்டு விட்டனர். ஆனால் கமலஹாசனுக்கு இந்தி சினிமாவில் மிக பெரிய சாதனை செய்து முன்னனி இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்தி சினிமாவில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை முன்னிலை படுத்தி பட வாய்ப்புகளை தேடி வந்த கமல்ஹாசனுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதை பெருத்து கொள்ள முடியமால் ஆட்களை செட் செய்து கமல்ஹாசன் பொது நிகழ்ச்சிக்கு வரும்போது அவர் மீது முட்டைகளை வீசி அதை ரசிகர்கள் எறிந்துள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர் இந்தி சினிமாவை கட்டுக்குள் வைத்துள்ள மாஃபியா கும்பல்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் மீது இந்தி ரசிகர்கள் கோபம் அதனால் தான் அவர் மீது அவர்கள் முட்டை வீசுவதாக செய்திகள் பரவியது, மேலும் இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க விரும்பாத கமல்ஹாசன் இந்தி சினிமாவில் பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்கிற தனது கனவை கலைத்துவிட்டு தொடர்ந்து தமிழில் நடித்து வந்துள்ளார். இந்த தகவலை சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்படத்தக்து.