நடிகை யாஷிகா ஆனந்த் வலையில் சிக்கிய தம்பி ராமையா..! குடும்பத்தில் வெடித்தது பெரும் சர்ச்சை..

0
Follow on Google News

ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது நடிகர் SJ சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை யாஷிகா ஆனந்த் சினிமாவில் கவர்ச்சி காட்டுவதும் மட்டுமில்லாமல் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றவர், ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டி, கையில் மது பாட்டில், சிகரெட் என அவருடைய புகைப்படம் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி தம்பி ராமையா நடிக்கும் மணியார் குடும்பம் எனும் படத்தில் அவருடன் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளார் இவர்கள் இருவரின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து இருவரும் பொது இடங்களுக்கு ஒன்றாக சுற்றி வர தொடங்கினர், இரவு பார்ட்டி, நட்சத்திர விடுதியில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நடிகை யாசிக்க ஆனந்த் முக்கியமாக சில இடங்களுக்கு தம்பி ராமையா மகன் உமாபதியை அழைத்து செல்லும் பொது இடங்களில் சந்திக்கும் முக்கிய நபர்களிடம் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், இவர் தான் எனது காதலன், விரைவில் நாங்கள் திருமணம் செய்ய இருப்பதாக தம்பி ராமையா மகன் உமாபதியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். இது தம்பி ராமையா குடும்பத்தில் பெரும் சச்சையாக வெடித்தது.

இந்நிலையில் தம்பி ராமையா மகன் உமாபதியை தன் வலையில் சிக்க வைத்த நடிகை யாஷிகா ஆனந்த் அவரை விட்டு பிரிவதாக இல்லை. ஆனால் தம்பி ராமையா தனது மகன் உமாபதிக்கு மலேசியாவில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அணைத்து ஏற்பாடும் செய்து வந்த நிலையில், யாஷிகா ஆனந்த் இடையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது தம்பி ராமையாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவர் குடும்பத்திலும் பெரும் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சினிமாவில் உள்ள சில முக்கிய நபர்கள் உதவியுடன் நடிகை யாஷிகா ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்திய தம்பி ராமையா தனது மகன் உமா பாரதியை விட்டு விலகும் படி வலியுறுத்தியுள்ளார், மேலும் சினிமாவில் உள்ள சில முக்கிய நபர்கள் நடிகை யாஷிகா ஆனந்தை எச்சரித்து தம்பி ராமையா குடும்பத்தில் உன்னால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது, இத்துடன் நீ அவர் மகனை விட்டு விலகவில்லை என்றால் சினிமாவில் ஒரு படம் கூட நடிக்க முடியாது என எச்சரித்ததை தொடர்ந்து தம்பி ராமையா மகன் உமாபதியை விட்டு யாஷிகா ஆனந்த் விலகியதாக கூறபடுகிறது.