திருச்சியில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்… பாய்ந்தது போக்சோ சட்டம்… ஆட்டோ டிரைவர் தலைமறைவு…

0
Follow on Google News

தமிழ்நாடு : திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 38 வயது விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். விஜயகுமாரின் மகளுக்கு எதிர்வீட்டில் இருக்கும் சிறுமியும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சிறுமி அவரது சித்தி வீட்டில் தங்கி அங்கு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி கூட்டத்தில் படித்து வருகிறார்.

விஜயகுமாரின் மகளும் எதிர்வீட்டு சிறுமியின் நட்பு வளர்ந்தது. இந்த நிலையில் விஜயகுமார் எதிர்வீட்டு சிறுமியின் செல்போன் எண்ணில் அவருக்கு மெசேஜில் சாட்டிங் செய்து வந்தார். தவறான நோக்கத்தில் சிறுமியிடம் பழகி வந்த விஜயகுமார் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்துள்ளார். சிறுமி எதிர்வீட்டு விஜயகுமாருடன் செல்போனில் பேசி வருவது தெரியவந்தது. சிறுமியின் வீட்டில் செல்போனை பிடிங்கி விட்டு கடுமையாக கண்டித்தனர்.

ஆனால் விஜயகுமார் விடுவதாக இல்லை வேறு ஒரு செல்போன் சிறுமிக்கும் வாங்கிக் கொடுத்து அதில் பேசி வந்தார். சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிகழ்வுக்குப் பிறகு சிறுமி விஜயகுமாரிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திவிட்டார். ஆத்திரமடைந்த விஜயகுமார் மது அருந்திவிட்டு வந்து சிறுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். பெற்றோர்களின் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலவந்தமாக பலாத்காரம் செய்த விஜயகுமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. கைதாகும் விஷயம் தெரிந்த விஜயகுமார் முன்கூட்டியே தலைமறைவாகினர். போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான விஜயகுமாரி தீவிரமாக தேடி வருகின்றனர்.