இவனுங்க சுதந்திரத்திற்காக போராடியவர்களா.?இவர்களின் புளுகுக்கு எல்லையே கிடையாதா.?ஹெச்.ராஜா நக்கல் பதில்..

0
Follow on Google News

75வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி மரியாதை செய்து பேசிய போது. ”75ஆவது சுதந்திர நாளை நினைவுகூரும் வகையில் மிகப்பெரிய தூணை இன்று உருவாக்கி இருக்கிறோம். அது வெறும் கல்லாலும் சிமெண்டாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல. நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டதுதான் அந்தத் தூண்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண். பூலித்தேவர், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தளபதி சுந்தரலிங்கம், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, சின்ன மருது, பெரிய மருது, வ.உ.சி., மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா, டி.எஸ்.எஸ். ராஜன், தில்லையாடி வள்ளியம்மை, தந்தை பெரியார்,

திரு.வி.க., நாமக்கல், ராமலிங்கம், ம.வெ.சிங்காரவேலர், பாரதிதாசன்,பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,திருப்பூர் குமரன், ராஜாஜி,காமராசர், ஏ.எம். ஈஸ்வரன், ஓமந்தூர் ராமசாமி, ஜீவா, கேப்டன் லட்சுமி, ம.பொ.சிவஞானம், கே.பி. சுந்தராம்பாள். இத்தகைய தமிழ்நாட்டுத் தியாகிகளின் மூச்சுக்காற்றைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த நினைவுத் தூண்” என முக ஸ்டாலின் சுதந்திர தின உரையில் பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து சுதந்திரத்துக்காக போராடியதாக பெரியார் பெயரை முக ஸ்டாலின் குறிப்பிட்டது பெரும் விமரிசனம் எழுந்துள்ளது. இவர்கள் புளுகுக்கு எல்லையே கிடையாதா என கேள்வி எழுப்பிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மேலும் சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15 நமக்கு துக்க தினம் என பெரியார் அறிவித்ததை சுட்டி அப்போது வெளியான பத்திரிக்கை செய்தியை வெளியிட்டு இவனுங்க சுதந்திரத்துக்கு போராடியவர்களா என நக்கல் செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ஹெச்.ராஜா.