கள்ளக்காதல் மோகம் … கடைசியில் உயிர் போனதுதான் சோகம்…பரமக்குடியில் பரபரப்பு..

0
Follow on Google News

தஞ்சாவூரில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தவர் திருநாவுக்கரசு. இவர் ராமநாதபுரம் பரமக்குடியில் உள்ள செவ்வூர் வடக்கு குடியிருப்பைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்தநிலையில் அவர் குடும்பத்துடன் தஞ்சாவூரில் தங்கி ஆடு மேய்த்து வந்தார். திருநாவுக்கரசின் சொந்த ஊரான பரமக்குடி அதே பகுதியில் இருக்கும் தெற்கு குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜித்.

இவரும் ஆடுமேய்க்கும் தொழில் செய்துவந்தார். அஜித்துக்கு காயத்ரி என்கிற தங்கை உண்டு. திருநாவுக்கரசு க்கும் அஜித்தின் தங்கை காயத்ரிக்கும் கள்ளத்தனமாக காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் இந்த விஷயம் அஜித்தின் குடும்பத்தினருக்கு தெரியவர காயத்ரியை சொந்த ஊரான செவ்வூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தன் வீட்டு வேலைக்காக நேற்று முன்தினம் செவ்வூர் கிராமத்திற்கு வந்த திருநாவுக்கரசு, அஜித்தின் தங்கை காயத்ரியுடன் பேச முயற்சித்தார்.

இந்த விஷயம் கேள்விப்பட்டு காயத்ரியின் அண்ணன் அஜித் மற்றும் அவரது சித்தப்பாவின் மகனான சச்சினுடன் இணைந்து சண்டையிட்டு திருநாவுக்கரசை உருட்டுக் கட்டைகள் கொண்டு சரமாரியாக தாக்கினார். அங்குள்ள கிராம மக்கள் சண்டையை விலக்கினார். பலத்த காயமடைந்த திருநாவுக்கரசு தன் தங்கையின் வீட்டிற்குச் சென்று படுத்தார். சிறிது நேரத்தில் தங்கை மருந்து போட அண்ணன் திருநாவுக்கரசு அருகில் சென்றபோது பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளார்.

எழுப்ப முயற்சித்தும் அண்ணன் எழுந்திரிக்கவில்லை அப்போது தான் அவர் உயிரிழந்து தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சத்திரக்குடி போலீசார் திருநாவுக்கரசரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநாவுக்கரசரை உருட்டுக்கட்டையால் தாக்கிய அஜித் மற்றும் அவரது தம்பி சச்சின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று மாவட்ட அமர்வு நீதிபதி சிட்டிங் பாபு முன்னிலையில் சரணடைந்தனர். கள்ளக்காதலுக்காக உருட்டுக்கட்டையால் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.