போங்க தம்பி … ஏமாற்றாமல் போய் ஒழுங்கா வரி காட்டுங்க….!நீதிமன்ற அதிரடி உத்தரவால் மூக்குடைபட்ட நடிகர் சூர்யா..

0
Follow on Google News

நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் கடந்த 2010ம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சூர்யாவின் தி.நகர் வீட்டில் சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது கைப்பற்றியதாக செய்திகள் வெளியானது. இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் சரியாக வருமான வரி கணக்கை சூர்யா காட்டவில்லை என்கிற குற்றசாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வீட்டில் 2010-ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில், 2007-2008ஆம் ஆண்டு மற்றும் 2008-2009ஆம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டத்தை தொடர்ந்து .

இந்த வழக்குகளை விசாரித்த தீர்ப்பாயம் நடிகர் சூர்யா செலுத்த வேண்டிய 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.இந்நிலையில், தீர்ப்பாயத்தில் சூர்யா வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்குச் சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோர நடிகர் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால், சூர்யா தாமதமாகத்தான் கணக்கைத் தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால்,

வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையெனவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து நீதிமன்றம் சென்று சதுர்த்தியமாக 1 சதவீதம் வட்டியுடன் செலுத்தாமல் வருமான வரித்துறையினரை ஏமாற்றி தப்பித்து விடலாம் என்கிற கனவில் இருந்த நடிகர் சூர்யா தலையில் இடி விழுந்தது போல் இருந்தது நீதிபதியின் தீர்ப்பு..