நெற்றிக் கண்ணால் பார்க்கும் நயன்தாரா…

0
Follow on Google News

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஒரு சைக்கோ கில்லர் படம்தான் நெற்றிக்கண். கொரோனா பெரும் தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், இந்த படம் நேற்று ஒன்லின் ஓட்டி தளமான ஹாட்ஸ்டார் இல் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரியன் படத்தின் ரீமேக்தான் நெற்றிக்கண் திரைப்படம். இந்த படத்தை தமிழில் மிக கச்சிதமாக இயக்கியுள்ளனார்.

தமிழ் பல சைக்கோ கில்லர்கள் படம் வந்தாலும் இந்த படம் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். எதிர்பாராத விபத்தில் பார்வையை இழந்து தவிக்கும் காட்சிகள் விழியோரத்தில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது. மிலன் ராவ் இயக்கத்தில் கொரியன் படத்தை மிஞ்சி விடுகிறது. கிரிஷ் ஜீ இசையில் படம் மிரட்டுகிறது.

சைக்கோ கதாபாத்திரத்தில் நவீன் சிறப்பாக நடித்திருக்கிறார். நவீன் பெண்களைக் கடத்திக் கொள்வதற்கான காரணம் படத்தின் முடிவில் தான் இருக்கிறது. நயன்தாரா நவீன் இடம் எப்படி சிக்குகிறான் எப்படி மீண்டு வருகிறார் நயன்தாரா இடம்தான் நவீன் செய்கிறாரா என்று படம் சுவாரசியமாக நகர்கிறது. இந்த படத்தை நயன்தாரா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பேபி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நயன்தாராவின் நெற்றிக் கண்ணைத் திறந்த இந்த படம் திரையரங்குகளில் வெளிவந்தால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும். நெற்றிக்கண் படத்தில் ஒருசில மைனஸ் மட்டுமே இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.