திருமணமாகி 3 மாதங்களில்… மனைவியை அடித்து கொன்ற கணவன்…தஞ்சாவூரில் நடந்த பகீர் சம்பவம்..

0
Follow on Google News

தஞ்சாவூர் மாவட்டம் வாட்டாத்தி கொல்லைகாட்டையை சேர்ந்த பிரபாகரன். இவருடைய மகள் ஜோதிக்கு முன்று மாதங்கள் முன்பு பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொண்டிகுளத்தை சேர்ந்த மணிகண்டனுக்கும் திருமணம் நடந்தி வைத்தனர். மணிகண்டனும் அவரது மனைவி ஜோதி சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையில் கலந்து கொள்வதற்காக உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

பிறகு நேற்று காலை மணிகண்டன் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது தீடிர் என்று பைக்கை நிறுத்தி மனைவியை கீழே இறங்க சொல்லி விட்டு மணிகண்டனும் இறங்கியுள்ளார். கீழே கிடந்த கட்டையை எடுத்த மணிகண்டன் மணைவி பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ஜோதியின் தலையின் பலமாக அடித்ததில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் மனைவி இறந்ததை அடுத்து அங்கு தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜோதியின் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணைவியை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்த மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் எதற்காக மணிகண்டன் ஜோதியை கொலை செய்தார் காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமண நடைபெற்று மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் கணவன் மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் தீயாய் பரவி வருகிறது.