குடும்பத்தில் பிரச்சனை….. விஷ பாட்டிலுடன் கே. ராஜன்..! உண்மையை போட்டுடைத்த பயில்வான்..

0
Follow on Google News

பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர் கே. ராஜன் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தயாரிப்பாளர் கே ராஜன் குடும்பத்தை பிரிந்து தனியாக ஓட்டலில் தங்கியுள்ளார் என பயில்வான் தெரிவிக்க, அதற்கு நீ அனுப்பிய ஆள் யாரும் அந்த ஓட்டலுக்கு வரவில்லை, என் மகன்கள், பேரன்கள் தான் என்னை பார்க்க வருகிறார்கள் என்று கே. ராஜன் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது கே.ராஜனுக்கு பதிலடி தரும் விதத்தில் பயில்வான் பேசியதாவது. இதுவரை எந்த நடிகர், நடிகையாவது நான் பேசியது தவறு என்று சொல்லவில்லை. நடிகை சினேகா திருமணத்திற்கு முன்பே காப்பர் டி வைத்துள்ளார் என்று நான் தெரிவித்திருந்தேன். ஆனால் இது நடந்த அப்போதே ஒரு வார பத்திரிகையில் செய்தியாக வந்திருந்தது, நடிகை சினேகாவுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மருத்துவமனையை சென்றபோது அவர் உடலை பரிசோதனை செய்த போது,

அவர் காப்பர்-டி வைத்திருந்தது அந்த மருத்துவர் மூலமாக தகவல் கசிந்து. அது ஒரு வார பத்திரிகையில் செய்தியாக வெளியானது. சமீபத்தில் சினேகா கணவர் நடிகர் பிரசன்னா பேசும்போது, நாங்கள் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்த பின்பு திருமணத்திற்கு முன்பே நியூயார்க்கில் இருவரும் டேட்டிங் செய்தோம். என்று வெளிப்படையாக சொல்லுகிறார். அவரிடம் சென்று கேள்வி கேளுங்கள். நான் ஆதாரமில்லாமல் ஏதும் சொல்லவில்லை.

தயாரிப்பாளர் கே ராஜன், நான் அனைத்து நடிகைகளையும் அவதூறாக பேசுவதாக, ஒரு பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார். நான் அனைத்து நடிகைகளையும் அவ்வாறு பேசவில்லை. குறிப்பிட்ட சில நடிகர்களை பற்றி உண்மையை மட்டும் தான் நான் பேசுகிறேன். 78 வயதாகும் கே ராஜன் குடும்பத்துடன் தற்போது இல்லை. தனியாக ஓட்டலில் ரூம் எடுத்து தங்குகிறான் என கேள்வி கேட்டால், நான் இரண்டு மகன்களுக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விட்டேன் என்கிறார்.

அப்படி சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விட்டால் உங்கள் மகன் ஏன் உங்களுக்கு சோறு போடவில்லை. ஏன் தனியாக ஓட்டலில் தங்கி இருக்கிறீர்கள், குடும்பத்தில் பிரச்சினை என்பதால் தானே ஓட்டலில் தங்கி உள்ளீர்கள். அப்படியானால் உங்கள் குடும்பத்தில் இருந்து துரத்தி விட்டார்கள் என்று தானே அர்த்தம். இந்த உண்மையை வெளியில் சொன்னால் நான் ஆபாசமாக பேசுகிறேன், என்று சொல்கிறீர்கள். நான் தமிழ் வாத்தியார் என்று திருக்குறளை பேசினால் மட்டும் போதாது, திருக்குறள் சொன்னபடி வாழ வேண்டும்.

தயாரிப்பாளர் கே ராஜன் முதல் தயாரிப்பான பிரம்மச்சாரி படம் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவந்துவிட்டது. பிரம்மச்சாரி படத்தின் பெட்டிகள் தயாரானது. அதை நம்பி அனைத்து விநியோகஸ்தர்களும் படத்தை வாங்குவதற்கு பணத்தை கே ராஜன் இடம் கொடுத்து விட்டார்கள். ஆனால் இரண்டு பிரிண்ட் மட்டும் டெலிவரி எடுத்து, ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு மற்றொன்று விநியோகஸ்தருக்கு என்று வாங்கிக்கொண்டு, குடியாத்தம் தியேட்டரில் பிரம்மச்சாரி படத்தை ரிலீஸ் செய்து விட்டார் கே ராஜன்.

இது மிகப்பெரிய பிரச்சனையாக அப்போது வெடித்த போது குடியாத்தம் திரையரங்கில் உள்ள கழிவறையில் கையில் விஷ பாட்டிலை வைத்துக் கொண்டு நான் சாகப்போகிறேன் என்று அழுதுகொண்டே மிரட்டி அனைத்து விநியோகஸ்தர்களிடம் பணம் வசூல் செய்தவர்தான் கே ராஜன், இது போன்று பல விஷயங்கள் என்னிடம் இருக்கு என பயில்வான் ரங்கநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

நள்ளிரவில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியமால் அஜித் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்தார் அஜித் தெரியுமா.?