Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வைரமுத்து ….சின்மயி வெளியிட்ட பரபரப்பு.! தனி அறையில் நடந்தது என்ன.? - Dinaseval News

என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வைரமுத்து ….சின்மயி வெளியிட்ட பரபரப்பு.! தனி அறையில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

இன்று மகளிர் தினம் கொண்டாடபட்டு வரும் நிலையில் பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ள நிலையில். வைரமுத்து குறித்து ஒரு பரபரப்பு சம்பவத்தை சின்மயி தெரிவித்திருந்தது தற்போது வைரலாகி வருகிறது, அதில் வைரமுத்து பெண்களை வேட்டையாடும் விதம் , பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள் என்கிற தலைப்பில்,

சில்வர்ஸ்கிரீன் இந்தியாவில் வைரமுத்து பற்றி பாலியல் துன்புறுத்தல் பற்றி பின்னணி பாடகி சின்மயி கூறியதாக வெளியான தகவல் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது, இதை சின்மயி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார், அதில் தெரிவித்துள்ளதாவது. “எனக்கு நினைவிருக்கிறது, சில ஆவணங்களில் கையெழுத்திட நான் வைரமுத்தின் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு இசைநிகழ்ச்சிக்காக என்று நினைக்கிறேன்…

கதவு திறந்திருந்தது. நான் உள்ளே சென்று கையெழுத்திட்டேன். அவர் தனது மேஜையின் ஒரு புறம் அமர்ந்திருந்தார் நான் மறுபுறம். அவர் தன் முனையில் இருந்து எழுந்து என்னிடம் வந்தார், நானும் மரியாதை நிமித்தமாக எழுந்தேன். அந்த நேரத்தில் அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்… நான் நடுங்க ஆரம்பித்தேன். என்னுடைய செருப்புகளை அங்கேயே விட்டுவிட்டு விரைந்து கீழே ஓடினேன்.

பொன்மணி (வைரமுத்துவின் மனைவி, அவரும் ஒரு கவிஞர் மற்றும் மீனாட்சி பெண்கள் கல்லூரியின் மேனாள் பேராசியர்) என் அம்மாவுடன் கீழே பேசிகொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். கீழே என் அம்மாவும் இருந்தார்கள். அங்கு ஒரு கோவில் இருந்ததால் அம்மா மிகவும் ஆர்வமாக இருந்தார். ஏனென்றால், வைரமுத்து ஒரு நாஸ்திகர் என்பதனால். அம்மா அந்த இடத்தைப் பார்க்க விரும்பினார். எங்கள் கார் நிறுத்தப்பட்ட நேரத்திற்கும், கோயிலைப் பார்க்க என் அம்மா வந்த நேரத்திற்கும் இடையில், நான் மீண்டும் வெளியே விரைந்தேன்.

இவை அனைத்தும் அனேகமாக 7 நிமிடங்களுக்குள் நடந்துமுடிந்திருக்கலாம். நான் வேகமாக கீழே ஓடிச்சென்று “நாம் போகலாம்” என்று அம்மாவிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. என் அம்மாவின் கார் டாஸ்போர்டில் எதையோ வைத்ததும் நினைவிருக்கிறது.. பின்பு வைரமுத்து என்னைப் பாலியல் துன்புறுத்தியதை அம்மாவிடம் சொன்னேன். அம்மா என்னை அவமானப்படுத்தவில்லை, அப்படி ஒரு போதும் செய்கிற அன்னை அல்ல அவர். என்னிடம் அதைக் கடந்து செல்லச் சொன்னார்.

அதன் பிறகு, ஏதோ குழுவின் ஒரு பகுதியாகப் பாடுவதற்காக வைரமுத்து என்னை ஒன்றிரண்டு முறை அழைத்தார். அப்போதெல்லாம் நான் அவருடைய மனைவி பொன்மணியைக் கண்டுபிடிப்பேன், அவர் பாதுகாப்பான தூரத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்வேன், அத்துடன் அவருடன் ஒருபோதும் தனியாக இருக்க நேராமல் பார்த்துக்கொண்டேன். ரிக்கார்டிங் செல்லும் போதெல்லாம், இசையமைப்பாளரிடம் அவர் அங்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டேன் என வைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவலை சின்மயி கடந்த வருடம் வெளியிட்டது தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவை பார்த்து திருந்துவார்களா சூர்யா குடும்பத்தினர்..! சத்தமில்லாமல் என்ன செய்து வருகிறார் குஷ்பு தெரியுமா.?

error: Content is protected !!