Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
சூர்யாவின் கனவெல்லாம் பாலாய் போச்சே… எல்லாம் நேரம் .. என்னத்த சொல்ல… - Dinaseval News

சூர்யாவின் கனவெல்லாம் பாலாய் போச்சே… எல்லாம் நேரம் .. என்னத்த சொல்ல…

0
Follow on Google News

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒவ்வொரு படத்தையும் அதிக மெனக்கட்டு படம் தொடங்கிய பின்பு, அதில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வந்து, ஒரு வழியாக அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கே பல காலங்கள் கடந்து விடுகிறது. அதேபோன்று தற்பொழுது விடுதலை படத்தின் பார்ட் 1 ரிலீஸ் செய்துள்ள வெற்றிமாறன். விடுதலை படத்தின் பார்ட் 2 ரிலீஸ் செய்வதற்கான நேரத்தை காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படம் இயக்குவதற்கு ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் அட்வான்ஸ் வாங்கி இருந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் பட குழுவினர் தரப்பினர் வெற்றிமாறனுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார்கள். நீங்கள் அட்வான்ஸ் வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது, அதனால் எங்களுடைய படத்தை விரைவில் தொடங்குங்கள் என கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை படத்தின் பார்ட் 2 வெறும் 20 நாட்கள் இருந்தால் போதும், இந்த படத்தை முடித்து வெளியிட்டு விடலாம் என்கின்ற திட்டத்தில் ஆரம்பத்தில் இருந்த வெற்றிமாறன், தற்பொழுது கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து 20 நாட்களில் முடிக்க முடியாது, மேலும் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என் தன்னுடைய திட்டத்தை மாற்றியுள்ளாராம்.

அந்த வகையில் இந்த வருட இறுதிக்குள் விடுதலை பார்ட் 2 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த வருடம் விடுதலை 2 படம் திரைக்கு வர இருக்கையில், வெற்றிமாறன் விடுதலை 2 படத்தை முடித்துவிட்டு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க இயக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த அளவுக்கு கடும் நெருக்கடி ஜூனியர் என்டிஆர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் திரைப்படம் விடுதலை படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் வந்து விடுவார் என நீண்ட காலமாக காத்திருந்த சூர்யா, விடுதலைப் படத்தில் முடிப்பதற்கு வெற்றிமாறன் காலதாமதம் ஏற்படுத்தி வந்ததை தொடர்ந்து. அந்த இடைப்பட்ட காலத்தில் சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வந்துவிடுகிறேன் என கங்குவார் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் விடுதலை பார்ட் 1 வெளியான நிலையில் அடுத்து பார்ட் 2 வெளியான பின்பு வாடிவாசல் படம் தொடங்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பில் சூர்யா இருந்த நிலையில், விடுதலை பார்ட் 2 முடித்துவிட்டு வெற்றி மாறன் ஆந்திராவை நோக்கி என் டி ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதால், வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தற்பொழுது தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜூனியர் என் டி ஆர் வைத்து ஒரு படத்தை இயக்கி விட்டு மேலும் பல கமிட்மென்ட்களை வெற்றிமாறன் முடித்து வாடிவாசல் படத்தை இயக்க வருவதற்குள் தற்பொழுது பள்ளியில் படித்து கொண்டிருக்கும் சூர்யா மகன் கல்லூரி படிப்பை முடித்து அவரும் ஹீரோவாக நடிக்க வந்து விடுவார் என்று பலரும் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியான போதே சுமார் 25 கோடி ரூபாய்க்கு ஹிந்தி டப்பிங் வியாபாரத்தை அந்த படத்தின் தயாரிப்பாளர் தானு முடித்து விட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதால் எதற்காக வெற்றிமாறன் லண்டன் சென்று இந்த படத்திற்கான வேலையில் இதற்கு முன்பு ஈடுபட்டுள்ளார்,

அதாவது ஜல்லிக்கட்டு காளை சம்பந்தமான பல காட்சிகள் சிஜி ஒர்க் மூலம் படமாக்கப்பட இருப்பதால், அந்த சி ஜி ஒர்க்கை லண்டனில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் சிஜி ஒர்க் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அது எப்படி வந்துள்ளது என்று பார்ப்பதற்காக தான் இதற்கு முன்பு லண்டன் சென்றுள்ளார் வெற்றிமாறன். அந்த வகையில் வடிவசால் படத்தை கைவிடவும் முடியாமல் தவிர்த்து வருகிறார் அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு.

error: Content is protected !!