பியூட்டி பார்லரில் வைத்து சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…உடந்தையாக இருந்த பெண்ணை கைது செய்த போலீசார்..

0
Follow on Google News

டெல்லியில் தாப்ரி பகுதியில் 42 வயதான பெண் ஒருவர் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு பியூட்டி பார்லர் சம்பந்தமான பயிற்சிகளையும் வழங்கி வந்துள்ளார். இவர் தன்னார்வ அமைப்பு ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது 16வயது மகளை அந்த பியூட்டி பார்லருக்கு தொழிலைத் கற்று கொள்ள அங்கு அனுப்பி உள்ளார். அந்த சிறுமியும் தான் தாய் சொன்னதைக் கேட்டு தொழிலை கற்று கொள்ள அங்கு தினமும் சென்று கற்று வந்துள்ளார்.

தினம் பார்லர் சென்று வந்த சிறுமிக்கு அந்த பியூட்டி பார்லர் உரிமையாளரின் ஆண் நண்பர்கள் சிலர் சிறுமியிடம் அடிக்கடி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தை பார்லர் உரிமையாளரிடம் கூற அவரும் கண்டு கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து அந்த சிறுமி பார்லருக்கு சென்று உள்ளார். அன்று அந்த பார்லரில் பார்லர் உரிமையாளரின் நண்பர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை அந்த பார்லர் உரிமையாளர் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் சிறுமி பியூட்டி பார்லருக்கு வர மறுக்க, அந்த பெண் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும், இதை பற்றி நீ வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூற, அவர் உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பியூட்டி பார்லர் நடந்தி வரும் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் அந்த சிறுமியின் தாயாரும் பார்லர் உரிமையாளரும் நண்பர்களாக இருந்த காரணத்தால் தனது மகளை பார்லருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் தனது தோழியின் மகள் என்று கூட பார்க்காமல் நண்பர்களை வைத்து பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த பெண்ணின் நண்பர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.