விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நடிகை!

0
Follow on Google News

மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணிக் கதாநாயகியாக இருந்து வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்நிலையில் இவர் நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து மஸ்கட் செல்ல முயன்றார். அப்போது விமானத்துறை அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மேலும் அங்கிருந்து டெல்லி அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் ஏற்கனவே அனுப்பப்பட்டு இருந்தது.

மேலும் ஜாக்குலினுக்கும் சுகேஷ் சந்திராவுக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே ஜாக்குலின் வெளிநாடு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.