Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
டேய்.. தம்பி சூர்யா உன் படம் இனி திரையில் ஓடாது… மொத்த சூர்யா குடும்பத்தையும் வெளுத்து வாங்கிய திருமாறன் ஜி வைரல் வீடியோ… - Dinaseval News

டேய்.. தம்பி சூர்யா உன் படம் இனி திரையில் ஓடாது… மொத்த சூர்யா குடும்பத்தையும் வெளுத்து வாங்கிய திருமாறன் ஜி வைரல் வீடியோ…

0
Follow on Google News

முதுகளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து இதுவரை வாய் திறக்காத நடிகர் சூர்யா குறித்து நமது தினசேவல் நியூஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தென்னிந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி பேசியதாவது. சூர்யாவுக்கு அரசாங்கம் ஆதரவு இருக்கு என்பதற்காக அந்தப் பையன் ரொம்ப தெனாவட்டாக தன்னை ஒரு புரட்சியாளராக காட்டிக் கொண்டிருக்கிறார், அவன் தம்பி கார்த்திக் சாதி சார்ந்த படத்தில் நடிப்பார், இவன் சாதி இல்லை என்று நடிப்பான்.இவங்க அப்பா இரண்டும் இல்லாமல் அனைவரையும் குழப்பி விட்டு செல்வார். இந்தக் குடும்பமே ஒரு சைசான குடும்பம்,

இந்திய இறையாண்மைக்கு யாரெல்லாம் எதிராக பேசுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் இடத்தில் இந்த தம்பி சூர்யா இருக்கான். சாத்தான்குளம் மரணம் குறித்து பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டார் சூர்யா, ஆனால் முதுகுளத்தூர் மரணம் குறித்து ஏன் இவர் அறிக்கை விடவில்லை. இவன் குரல் கொடுக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளு கிடையாது. நீ எதுக்குமே வாய் திறக்கவில்லை என்றால் உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

ஆனால் சாத்தான்குளம் சம்பவத்துக்கு அறிக்கை வெளியிட்ட நீ, முதுகுளத்தூர் சம்பவத்திற்கு அமைதியாக இருப்பதால் தான் மக்கள் உன்னை கேள்வி கேட்கிறார்கள். நீ அறிக்கை வெளியிட்டால் என்ன.?வெளியிடவில்லை என்றால் என்ன.? இவனை எல்லாம் பேசி பேசி தான் நாம் பெரிய ஆள் ஆகி விடுகிறோம், சமீபத்தில் இவர் நடித்து வெளியான படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் அக்னிகுண்டம் காலண்டர் இடம்பெற்றது.

பின் கடும் எதிர்ப்புக்கு பின்பு இந்துக்கள் வழிபடும் மஹாலஷ்மி படம் மாற்றப்பட்டுள்ளது, அப்படியானால் இங்கே இருக்கும் இந்துக்களுக்கு வெட்கம், சூடு, சொரணை இல்லை என்று நினைத்து விட்டான். ஒரு சமூகத்தை வஞ்சிப்பது போன்று படம் எடுக்கிறான், இவர்களின் நோக்கம் பெரும்பான்மையான சமூகம் எங்கெல்லாம் இருக்கிறதோ அவர்களை இழிவு படுத்த வேண்டும். அவர்களை வன்முறையாளராக மாற்ற வேண்டும்.

இந்த சினிமாக்காரர்களை ஒன்று சொல்கிறேன, இந்து மதத்தை இழிவு படுத்தும் படி தொடர்ந்து படமெடுத்தால், குறிப்பாக தம்பி சூர்யா உனக்கு சொல்கிறேன் நீ படம் எடுத்தால், உன் படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட விடமாட்டோம். உன் படம் ஓடாது தம்பி. உன் படம் ஓட வேண்டும் என்றால் நீ ஒழுக்கமா நடந்துகொள். மஹாலட்சுமி படத்தை சர்ச்சைக்குரிய வகையில் வைத்துள்ளாய். அப்படி வைத்தால் எந்த தமிழ் சாதியும் கேள்வி கேட்காது என நினைத்தாயா.?

நாங்கள் கேள்வி கேட்போம் தேசியத்தை உடலாகவும் தெய்வீகத்தை உயிராகவும், கருதும் தேவர் சமுதாயம் தென் தமிழகத்தில் இருக்கின்றோம். நாங்கள் கேட்போம், உன் திமிரை அடக்க வேண்டிய காலம் மிக விரைவில் வந்து விட்டது. தமிழ் சமுதாயம் சாதியை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சூர்யா போன்றவர்கள்தான் சாதியையும், மதத்தையும் வைத்து பிரச்சனையை செய்கிறான்.

அடுத்து புதிய படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என பெயர் வைத்துள்ளார் சூர்யா, நான் வன்னியரே எதிர்க்கிறேன், இந்துமதத்தை எதிர்க்கிறோம், தேவர் சமூகத்தை எதிர்க்கிறோம், கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்ற திமிரில் தான் எதற்கும் துணிந்தவன் என பெயர் வைத்துள்ளார் இந்த படத்தை கண்டிப்பான முறையில் தமிழகத்தில் ஓட விடமாட்டோம், நீ வந்து இந்த நெட்டு கிட்டுல வச்சு ஓட்டு என திருமாறன் ஜி கடுமையாக எச்சரித்து பேசிய வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?

error: Content is protected !!