Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
இனி எனக்கு பணக்காரர்கள் தேவை இல்லை…நல்ல மனித தான் வேண்டும்… மகள் திருமணத்தில் பட்டு திருந்திய இயக்குனர் சங்கர்… - Dinaseval News

இனி எனக்கு பணக்காரர்கள் தேவை இல்லை…நல்ல மனித தான் வேண்டும்… மகள் திருமணத்தில் பட்டு திருந்திய இயக்குனர் சங்கர்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் சங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் என இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். இளைய மகளான அதிதி சங்கர் கோலிவுட் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிதி ஷங்கர் ‘விருமன்’ படம் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். கடைக்குட்டியான மகன் படித்துக் கொண்டிருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு தற்போது இரண்டாவது திருமணம் நிச்சயமாகியுள்ளது.

ஐஸ்வர்யா சங்கருக்கு ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவர் உடன் திருமணம் நடந்து முடிந்தது. சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வளம் வரும் இயக்குனர் சங்கர், தனது மூத்த மகளின் திருமணத்தையும் ஜாம் ஜாம் என்று நடத்த வேண்டும் என்பதற்காக அவர் சினிமாவில் வருவது போன்று சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்து மகள் ஐஸ்வர்ய திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தினார்.

ஆனால் திருமணம் ஆன ஆறு மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என்றும், மகளை நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என்றும் ஆசையாக திருமணம் செய்து வைத்த சங்கருக்கு இவர்களின் விவாகரத்து பேரிடியாக இருந்தது. ஆனால், மகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பின்பு, ரோகித்தின் குணம் மற்றும் பின்னணி குறித்து ஷங்கருக்கு தெரிந்ததும், இப்படிப்பட்டவனுக்கா நம்ம மகளை திருமணம் செய்து வைத்தோம் என்று யோசித்தாராம்.

காரணம் ரோஹித் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்திருக்கின்றன. பாலியல் புகார்களுக்கு பயந்து போன ரோஹித் திடீரென தலைமறைவாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார். தீவிரமான தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர் ரோஹித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இப்படிப்பட்டவனுடன் மகளை எந்த நம்பிக்கையில் வாழ வைக்க முடியும் என்று வருந்திய சங்கர்.

மகளின் வாழ்க்கை இப்படி சின்னா பின்னமாய் போனதை நினைந்து, இனி பணத்தைப் பார்க்கக் கூடாது, குணத்தை பார்த்து தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதன்படியே, தன்னுடன் பணிபுரிந்த துணை இயக்குனரான தருண் கார்த்திகேயனை தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடும் செய்தார். ஐஸ்வர்யா தருண் கார்த்திகேயனின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

தன் மகளையே திருமணம் செய்து வைக்கிறார் என்றால், அந்த அளவிற்கு தருண் கார்த்திகேயன் மீது சங்கர் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. இயக்குனர் சங்கர் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது தான் தருண் கார்த்திகேயன் சங்கரின் டீமில் சேர்ந்து இருந்தாராம்.கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவராக இருந்த தருண் கார்த்திகேயனின் வேலைகள் சங்கருக்கு மிகவும் பிடித்துப் போகவே, அட்லியை போலவே தருணையும் சங்கருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம்.

எனவே, தருண் தான் தன் மகளுக்கு பொருத்தமான துணையாக இருக்க முடியும் என்று உறுதியாக நம்பிய சங்கர், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்திருக்கிறார். பல கோடி சொத்துகளுக்கு அதிபராக இருந்த ரோகித் எப்படிப்பட்டவர் என்பது தெரியாமல் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து மனம் நொந்து போன சங்கர், மீண்டும் அதே தவறை செய்ய விரும்பாமல் குணத்தையும் பண்பையும் பார்த்து தருணை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் என கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

error: Content is protected !!