Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
வெளியே வந்தும் அடங்காத பிக் பாஸ் மாயா… அர்ச்சனாவை வம்பிழுத்து ஆட்டத்தை தொடங்கிய மாயா.. - Dinaseval News

வெளியே வந்தும் அடங்காத பிக் பாஸ் மாயா… அர்ச்சனாவை வம்பிழுத்து ஆட்டத்தை தொடங்கிய மாயா..

0
Follow on Google News

அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்து விட்டது. முந்தைய ஆறு பிக் பாஸ் சீசன்களையும் விட இந்த பிக் பாஸ் சீசன் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.இரண்டு பிக் பாஸ் வீடுகள், 18 போட்டியாளர்கள் என இந்த சீசன் கூடுதல் விறுவிறுப்பாகவே சென்றது.

ஏராளமான மக்களின் மனம் கவர்ந்த இந்த சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது தான் பஞ்சாயத்துகள் சச்சரவுகள் என்று விறுவிறுப்பாக இருந்தது என்றால், சீசன் முடிந்த பிறகும் போட்டியாளர்களிடையே பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் பல கேங்குகளாக சுற்றி திரிந்தனர்.

அதில் மாயாவின் புல்லி கேங், அர்ச்சனாவையும் விசித்ராவையும் பயங்கரமாக கதறவிட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் தான் அப்படி என்றால் நிகழ்ச்சி முடிந்த பிறகும் மாயா அர்ச்சனாவே வம்பு இழுத்து வருகிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மாயா சீசன் தொடங்கியதில் இருந்து எப்போதும் ஒரு கர்வத்துடனே இருந்து வந்தார். அதுமட்டுமில்லாமல், பிக் பாஸ் வீட்டிற்குள் மாயாவுடன் கேங்காக சுற்றி வந்த சகப் போட்டியாளர்களுக்கும் நல்ல பெயர் கிடையாது.

இந்த சீசனில் மாயா பல்வேறு டாஸ்க்களை வெகு சிறப்பாக செய்திருந்தார். இருந்தாலும் சிலரிடம் எப்போதும் கெத்து காட்டிக் கொண்டே இருந்தார்.மேலும் தன்னுடன் இருந்த போட்டியாளர்களை தக்க சமயம் பார்த்து கழட்டி விடவும் அவர் தயங்கவில்லை. இந்த பட்டியலில் பிரதீப் ஆண்டனி சரவணன் விக்ரம் போன்றோர் அடங்குவர். அதே சமயம், பூர்விகா ஐசு போன்றவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டிற்குள் பயங்கரமாக கெத்து காட்டி வந்த மாயா, இறுதி வாரங்களில் அமைதியாக இருந்து வந்தார். இருட்டிலும் வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வந்து மாயாவை உசுப்பேத்தி விட்டார்கள். இதனால் மாயா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அர்ச்சனாவிடம் சவடால் பேசி சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து பிரச்சனைகளை திருப்பிக் கொண்டிருந்த மாயாவை நிகழ்ச்சியில் தூக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்க, அப்படி இப்படின்னு தப்பிச்சு மூன்றாவது இடத்தை பிடித்து விட்டார்.

இந்த சீசன் முழுவதும் பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவே டார்கெட் செய்து கழகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த மாயா, இப்போது சோசியல் மீடியாவிலும் அர்ச்சனாவே வம்பு இழுக்க தொடங்கி விட்டார். மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே அவருக்கு எதிராக ஏகப்பட்ட விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வலம் வந்தன. இந்த சூழலில் தற்போது சோசியல் மீடியாவில் தனது ஆட்டத்தினை மாயா துவங்கி இருக்கிறார்.

அதாவது, X தளத்தில் அர்ச்சனா டைட்டில் வின் பண்ணியதற்கு வாழ்த்து சொல்வது போல சொல்லி, பின்னர் சர்ச்சைக்குரிய வகையிலும் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “டைட்டில் வின் பண்ணியதற்கு வாழ்த்துக்கள். நீ நெனச்ச மாதிரி உன் வாழ்க்கையில் பூ பூக்கும். செடி வாடி போற மாதிரி இருந்துச்சுன்னா என்ன கூப்பிடு. நான் வந்து தண்ணி ஊத்துறேன் .. உனக்காக நான் எப்பவும் இருப்பேன் ” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மாயாவுக்கு எதிராக கொந்தளிக்க தொடங்கினர். மேலும் கமெண்ட் செக்ஷனில் மாயாவை கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர்.

error: Content is protected !!