Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
பொன்னியின் செல்வன் நடிகையுடன் சமந்தாவின் கணவர் லூட்டி… பாவம்யா சமந்தா.. - Dinaseval News

பொன்னியின் செல்வன் நடிகையுடன் சமந்தாவின் கணவர் லூட்டி… பாவம்யா சமந்தா..

0
Follow on Google News

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. குறிப்பாக சமந்தாவை படத்தில் நடிக்க கூடாது என குடும்பமே சேர்ந்து தடுத்த நிலையில், அதையும் மீறி சமந்தா பல படங்களில் நடித்து வந்ததால்,

சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இது சமந்தாவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இவரின் விவாகரத்துக்கு பிறகு சமந்தா உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக அதிக படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தான் சமந்தாவை கழட்டிவிட்ட கையோடு, நாக சைதன்யா, ஒரு பிரபல நடிகையை காதலிக்க தொடங்கினார். தற்போது அந்த நடிகையுடன் இன்று நாக சைதன்யாவுக்கு நிச்சயம் நடந்துள்ளது. இது நாக சைதன்யா ரசிகர்களை விட, சமந்தா ரசிகர்களுக்கு தான் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் நாகார்ஜுனா எப்படி முதலில் ஒரு திருமணம் செய்து, பின்னர், அவரை விவாகரத்து செய்து, இரண்டாவதாக நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டாரோ,

தற்போது, அப்படித்தான் நடிகர் நாத சைத்தன்யாவும், அப்பாவுக்கேற்ற பிள்ளை என்பது போல, அப்பா என்ன செய்தாரோ அதேபோல், முதலில் சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாவதாக வேறு நடிகையை திருமணம் செய்து கொள்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை, பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா தான்.

சோபிதா துலிபாலாவை தான் நடிகர் நாக சைதன்யா கடந்த சில வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார். அப்போதே ரசிகர்கள் இவர்கள் காதலிப்பதை கண்டுபிடித்தாலும், அதனை இரண்டு தரப்பினரும் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. குறிப்பாக நாக சைதன்யாவும், சோபிதாவும் வெளிநாட்டில் டேட்டிங் சென்ற புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

ஒரு புகைப்படத்தில் இருவரும் லண்டனில் இருக்கும் ஒரு இந்திய ரெஸ்டாரண்ட்டில் இருக்கின்றனர். அதேபோல் இன்னொரு புகைப்படத்தில் நாக சைதன்யா இருக்கும் இடமும், சோபிதா இருக்கும் இடமும் ஒரே மாதிரி இருந்தன. அந்தப் புகைப்படங்களை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இதனையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் எவ்வளவுதான் சைதன்யா மறைப்பிங்க, என்று கமெண்ட்ஸ் கூட செய்துவந்தனர்.

இந்த நிலையில் தான் தற்போது, கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி சோபிதா துலிபாலா, நாக சைதன்யா ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்துள்ளது. அதுவும் நாக சைதன்யாவின் இல்லத்தில் வைத்து தான் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் நாக சைதன்யாவுக்கு இது இரண்டாம் திருமணமாக இருந்தாலும், சோபிதாவுக்கு இதுவே முதல் திருமணம். இந்நிலையில் தான் சமந்தாவின் ரசிகர்கள் நாக சைதன்யாவை வாழ்த்த மனமில்லாமல், சமந்தாவிடம் இல்லாதது அப்படி அந்த நடிகையிடம் என்ன இருக்கிறது என விமர்சித்து, தங்கள் ஆதிங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

error: Content is protected !!