Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
விஜய் மகன் பிடிவாதம்… அப்பா சொல்றதெல்லாம் கேட்க முடியாது.. குடும்பத்தில் என்ன பிரச்சனை தெரியுமா.? - Dinaseval News

விஜய் மகன் பிடிவாதம்… அப்பா சொல்றதெல்லாம் கேட்க முடியாது.. குடும்பத்தில் என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு சஞ்சய் என்கின்ற மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள், இதில் மகன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா தொடர்பான பட்ட படிப்பை முடித்துள்ளார். அவர் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே சில குறும்படங்களையும் இயக்கி, அந்த குறும்படம் மிக பெரிய வரவேற்பை பெற்று, புலிக்கு பிறந்தது பூனையாகுமா என சஞ்சய் விஜய் பலரின் பாராட்டை பெற்றார்.

இந்நிலையில் தற்பொழுது விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் சில ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா கடந்த சில மாதங்களாக கணவர் விஜயை விட்டு பிரிந்து லண்டனில் குடியிருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொள்ளாமல் இருந்தது,

ஏற்கனவே விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் என்கிற செய்தியை உறுதிப்படுத்தும் விதத்தில் இருந்தது. இந்த நிலையில் விஜய் – சங்கீதா தம்பதியினர் மகன் மற்றும் மகள் இருவரும் பெரும்பாலும் லண்டனில் தாய் சங்கீதாவுடன் தான் அதிக நாட்கள் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா, இதற்கு முன்பு விஜய் மகன் சஞ்சய் இயக்கி நடித்த குறும்படத்தை பார்த்துவிட்டு அவரை மனதில் வைத்து கதை ஒன்றை தயார் செய்துள்ளார், இந்த படத்தில் சஞ்சய் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், விஜய்யை சந்தித்து படத்தின் கதையை தெரிவித்தவர், இந்த படம் உங்கள் மகனை மனதில் வைத்து தான் நான் உருவாக்கியுள்ளேன் என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போக, உடனே மகனை தொடர்பு கொண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகுவது குறித்து பேசியுள்ளார். ஆனால் அதற்கு சஞ்சய் தனக்கு ஹீரோவாக நடிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்தவர், மேலும் தன்னுடைய ஒரே விருப்பம் இயக்குனராக வேண்டும் என்பதுதான் என்று தன்னுடைய விருப்பத்தை சஞ்சய் தெரிவித்துள்ளார். விஜய் எவ்வளவோ பேசியும் கூட சஞ்சய் மறுத்து விட்டார்.

இந்த தகவலை சுதா கொங்கராவுக்கு விஜய் தெரிவித்துள்ளார், ஆனால், அவர் சார், ப்ளீஸ் உங்கள் மகனுக்காக உருவாக்கிய கதை, நீங்க தான் உங்க மகனிடம் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என தெரிவிக்க, விஜய்யும் மகனை கன்வின்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அம்மா சங்கீதா சொன்னால் சஞ்சய் நிச்சயம் கேட்பார் என கூறப்படுகிறது, ஆனால் தன்னுடைய மகனுக்கு விருப்பம் இல்லாத செயலை கட்டாய படுத்தி செய்ய சொல்ல மாட்டேன் என தெரிவித்துவிட்டாராம் சங்கீதா.

இந்த நிலையில் அப்பா சொல்றதெல்லாம் கேட்க முடியாது, எனக்கு என்ன தெரியும் என்பது எனக்கு தெரியும், அதனால் இயக்குனராவது தான் என்னுடைய ஒரு முடிவு என தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் விஜய் மகன் சஞ்சய்.இயக்குனராகுவதற்கு மிக தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!