Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
வடிவாசலில் இருந்து வெளியேற்றப்படும் சூர்யா… அமீர் விஷயத்தில் உறுதியாக இருக்கும் வெற்றிமாறன்… - Dinaseval News

வடிவாசலில் இருந்து வெளியேற்றப்படும் சூர்யா… அமீர் விஷயத்தில் உறுதியாக இருக்கும் வெற்றிமாறன்…

0
Follow on Google News

சுமார் 17 வருடங்களாக இயக்குனர் அமீருக்கும் நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கும் இடையில் இருந்து வந்த பனிப்போர் தற்பொழுது மிகப் பெரிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சிவகுமார் குடும்ப உறவினரான ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை தரம் தாழ்ந்து பேசியது மிகப் பெரிய விவாத பொருளாக உருவெடுத்து தமிழ் திரையுலகில் இருக்கும் பெரும்பாலானோர் அமீருக்கு ஆதரவாக களம் இறங்கியது சிவக்குமார் குடும்பத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

சினிமா துறையைச் சார்ந்த பலரும் இந்த விவகாரத்தில் நேரடியாக சிவக்குமார் குடும்பத்தினரை விமர்சனம் செய்து வருகிறார்கள், அந்த வகையில் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சனையில் சிவக்குமார் குடும்பம் மிகப்பெரிய அளவில் டேமேஜ் ஆகியுள்ளதை பார்க்க முடிகிறது. இயக்குனர் அமீருக்கும் , சிவக்குமார் குடும்பத்திற்கும் இடையிலான இந்த மோதல் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா மற்றும் அமீர் ஆகிய இருவரும் கமிட் ஆகியுள்ளனர்.

ஏற்கனவே இந்தப் படத்தில் அமீர் நடிக்க இருப்பதற்கு சூர்யா ஆரம்ப கட்டத்தில் அதிருப்தி தெரிவித்ததாகவும், அமீருக்கு பதில் வேறு ஒரு நடிகரை சூர்யா மாற்ற சொல்லி வலியுறுத்திய போது, அதற்கு வெற்றிமாறன் அதெல்லாம் முடியவே முடியாது. வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தை நான் அமீரை மனதில் வைத்தே தான் எழுதினேன் என்று கரராக ஆரம்பத்திலேயே அமீரை வாடிவாசல் படத்திலிருந்து மாற்றவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் வெற்றி மாறன்.

இந்த நிலையில் தற்போது அமீருக்கும் சிவகுமார் குடும்பத்துக்கும் இடையிலான பிரச்சனை மிகப் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அமீர் உடன் இணைந்து நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நிச்சயம் நடிக்க மாட்டார், அந்த வகையில் வாடிவாசல் படத்திலிருந்து அமீர் வெளியேறி விட்டார் என வதந்திகள் பரவிய அடுத்த சில மணி நேரத்தில், அமீரை நேரடியாக சந்தித்த வெற்றிமாறன் அந்த புகைப்படத்தையும் வெளியிட்டு இது வாடிவாசல் படத்திற்கான கலந்துரையாடல் என தெரிவித்து அமீர் குறித்த வதந்திகளுக்கு முற்றி புள்ளி வைத்தார்.

அந்த வகையில் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனை அமீர் இருக்கிறார் என்பதை உறுதி செய்த வெற்றிமாறன், சூர்யா குடும்பத்தினருக்கும் அமீருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு தான் அமீர் பக்கம் நிற்பதை மறைமுகமாக அந்த அமீர் உடனான சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தி விட்டார். இந்த நிலையில் சூர்யாவுக்காக அமீரின் நட்பை இழக்க வெற்றிமாறன் தயாராக இல்லை, அதே வேலையில் அமீரின் நட்புக்காக சூர்யாவை இழக்க தயாராக இருக்கிறார் வெற்றிமாறன் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிற்கும் சிவக்குமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது ஞானவேல் ராஜாவிற்கும் அமீருக்கும் நடக்கும் பிரச்சனையில் நிச்சயம் தயாரிப்பாளர் தானுவும் அமீர் பக்கமே நிற்பார். அந்த வகையில் சூர்யா அமீர் இருவரும் இணைந்து நடிப்பதில் ஒருவித சிக்கல் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில்,

வாடிவாசல் படத்தில் சூர்யா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால் ஞானவேல் ராஜாவை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், மேலும் அமீருக்கு சேர வேண்டிய பணத்தையும் செட்டில் செய்ய வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே ஒரு சமூக முடிவு ஏற்பட்டு அமீர் மற்றும் சூர்யா மீண்டும் தொடர்ந்து இணைந்து வாடிவாசல் படத்தில் நடிக்கும் சூழல் உருவாகும்.

அப்படி இல்லாமல் இந்த பிரச்சனை தொடர்ந்தால் நிச்சயம் வாடிவாசல் படத்தில் அமீர் இருப்பார், ஆனால் சூர்யாவுக்கு பதில் வேறு ஒரு நடிகர் அதில் இடம்பெறுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா வெளியேற்றப்படும் பட்சத்தில் தொடர்ந்து சுமார் பத்து வருடங்களாக சூர்யா நடித்த எந்த படமும் இதுவரை திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெறவில்லை அந்த வகையில் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா வெளியேறும் பட்சத்தில் அவருடைய சினிமா கேரியரே முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டும் என எச்சரிக்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

error: Content is protected !!