Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
விடிஞ்சா திருமணம்…முதல் நாள் இரவு வேறு நடிகையுடன் கமலஹாசன் உல்லாசம்..! பஞ்சாயத்து செய்த பாலச்சந்தர்.. - Dinaseval News

விடிஞ்சா திருமணம்…முதல் நாள் இரவு வேறு நடிகையுடன் கமலஹாசன் உல்லாசம்..! பஞ்சாயத்து செய்த பாலச்சந்தர்..

1
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கையில் வந்து போன நடிகைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், அவர் கிசு கிசுவில் சிக்கிய ஸ்ரீவித்யா முதல் தற்பொழுது உள்ள ஆண்ட்ரியா வரை எண்ணிக்கை ஏராளம், வாணி கணபதியை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு சரிதாவை திருமணம் செய்தார், இதன் பின்பு சிம்ரன், அபிராமி, கவுதமி , பூஜா குமார், ஆண்ட்ரியா என கமல்ஹாசன் உடன் ஜோடியாக வலம் வந்த நடிகைகளை சொல்லி கொண்டே போகலாம்.

சமீபத்தில் இவருடன் ஒன்றாக சுற்றி வந்த பூஜாகுமார் தீடிரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார், அதற்கு முன்பு சுமார் 12 வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக கமல்ஹாசன் உடன் வாழ்ந்து வந்த கவுதமி தனது மகளின் பாதுகாப்பு கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார். அதே போன்று கமல்ஹாசன் தொல்லை தாங்க முடியாமல் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் எடுத்தார் அபிராமி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சரிதாவை கமல்ஹாசன் காதலித்து கொண்டிருக்கும் போதே சரிதா கர்ப்பம் ஆனார். எங்கே கமல்ஹாசன் தன்னை கழட்டி விட்டுவிடுவார் என சந்தேகம் அடைந்த சரிகா. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை கமல்ஹாசன் தான் என திருமணத்துக்கு முன்பே அறிவிக்க, வேறு வழியிற்றி கமல்ஹாசனும் ஒப்பு கொண்டு சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன் வாழ்க்கையில் சரிகா உள்ளே வந்ததும் முதல் மனைவி வாணி கணபதி கமல்ஹாசனிடம் இருந்து பிரிந்தார்.

1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்கிற படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த வாணி கணபதி, அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. சுமார் மூன்று வருடமாக காதலித்து வந்த இருவரும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு மும்பையில் நடைபெற்று வந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே கமல்ஹாசன் குடும்பத்துக்கு பிடித்த பெண்ணாக மாறினார் வாணி கணபதி.

வாணி கணபதியை திருமணம் செய்வதற்கான ஏற்பாடு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் நடிகர் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா உடன் நெருங்கி பழகி வந்துள்ளார் கமல்ஹாசன். ரேகா இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர். கமலஹாசனும் அப்போது இந்தி படஙகளில் நடித்து கொண்டிருந்தார், இதனை தொடர்ந்து வாணி கணபதியுடன் திருமண தேதி நெருங்க நெருங்க நடிகை ரேகா உடனான நெருக்கம் கமல்ஹாசனுக்கு அதிகரித்து கொண்டே சென்றது.

இந்நிலையில் விடிந்தால் வாணி கணபதி – கமல்ஹாசன் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், முதல் நாள் இரவு முன்பையில் ஒரே அறையில் ரேகா உடன் கமல்ஹாசன் செம்ம ஜாலியாக இருந்து கொண்டு தனக்கு வாணி கணபதி உடன் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை என தெரிவிக்க, இந்த பிரச்சனை மிக பெரியதாக வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் கமல்ஹாசன் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இறுதியில் இயக்குனர் கே பாலச்சந்தர் பேசி கமல்ஹாசனை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்த பின்பு தான் வாணி கணபதி – கமல்ஹாசன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மீண்டும் கோகிலா படத்தில் நடிகை தீபா பாத்திரத்தில் நடிகை ரேகா தான் நடிப்பதாக இருந்துள்ளது, அவரை வைத்து சில கட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது, ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து ரேகா விலகியது குறிப்பிட்டத்தக்கது.

ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம்… ரஜினி கடும் எதிர்ப்பு… போதையில் இருவரும் தப்பு செய்து விட்டோம், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் வேதனை…

1 COMMENT

Comments are closed.

error: Content is protected !!