40 லட்சம் கொடுத்து நடிகர் பொன்னம்பலம் உயிரை காப்பாற்றிய சிரஞ்சீவி… கண் கலங்கிய பொன்னம்பலம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் இவரைப் பார்த்தாலே எல்லோரும் பயந்து நடுங்குவார்கள், அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் பொன்னம்பலம்.. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் என அனைவர் திரைப்படத்திலும் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்.

தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு தனது நடிப்பு திறமையால், தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பழமொழி படங்களிலும் வில்லனாகவும், ஸ்டண்ட் மேனாகவும் நடித்த இவர், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பயணித்து வருகிறார்.

பிறகு இவரை வில்லனாக பார்த்து பயந்த அனைவரும், இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி விளையாடியதை பார்த்து, இவரா கொடூர வில்லன் என மக்கள் ஷாக் ஆயினர். அந்த அளவிற்கு அமைதியாக விளையாடியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான், சமீப காலமாக திரைத்துறையில் நடித்த பல காமெடி நடிகர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கே பணம் இல்லாமல் தவித்தது போலவே, வில்லன் பொன்னம்பலமும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உதவி கோரியபோது தாராள பிரபு போல் ஓடிவந்து உதவிய நடிகரை பார்த்து திரைத்துறையை ஷாக் ஆகியுள்ளது.

சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் செயற்கை சுவாசத்துடன், யாராவது என் சிகிச்சைக்கு உதவுங்கள் என, கண்ணீர் மல்க பொன்னம்பலம் வெளியிட்ட வீடியோவையும், அவரின் தோற்றத்தை பார்த்தும் பலர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவருக்கு பலரும் உதவ முன் வந்தனர் குறிப்பாக, சரத்குமார், கமல், தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், பிரபுதேவா என பலரும் உதவி செய்தனர்.

இருப்பினும் அந்த பணம் போதுமானதாக இல்லாத சமயத்தில் தான், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் போன் நம்பரை தனது நண்பரிடம் இருந்து வாங்கி, அவருக்கு என் உடல்நிலை சரியில்லை தங்களால் இயன்ற உதவியை எனக்கு செய்யுங்கள் என ஒரே ஒரு மெசேஜ்ஜை தான் பொன்னம்பலம் போட்டு இருக்கிறார். இதனை பார்த்த சிரஞ்சீவி உடனே பத்து நிமிடத்தில் அவருக்கு போன் செய்து, ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்கீங்க, உங்களுக்கு என்ன ஆச்சு, கிட்னி பிரச்சினையா, நான் இருக்கிறேன், கவலைப்படாதீர்கள். உங்களால் ஹைதராபாத் வர முடியுமா என கேட்டிருக்கிறார்.

அப்போது பொன்னம்பலத்தால் அங்கு செல்ல முடியாத சூழ்நிலையில், ஏதோ 1லட்சம், 2 லட்சம் பண உதவி செய்வார் எனப் பார்த்தால், அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு போக சொல்லியிருக்கிறார். பிறது நான் பார்த்துக் கொள்கிறேன் என சொன்னவர் தான், பொன்னம்பலம் மருத்துவனைக்குள் என்ட்ரி ஆனதில் இருந்து, என்ட்ரி ஃபீஸ் ரூ 200 கூட வாங்கவில்லை, கிட்டதட்ட 45 லட்சம் வரை செலவானது.

அனைத்தையும் அவரே கவனித்து கொண்டிருக்கிறார். மேலும் ராம் சரணின் மனைவி உபாசனாவை நேரடியாகவே சென்று பார்த்துக்க சொல்லியிருக்கிறார்.சிரஞ்சீவி சொன்னதும், அவரும் நேரடியாக வந்து அவரை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த பொன்னம்பலம், அனுமனின் பெயரை கொண்ட சிரஞ்சீவி, எனக்கு உண்மையான கடவுளாக தான் தெரிகிறார். அவர் தான் என் உயிரையும் காப்பாற்றியிருக்கிறார் என்றும் மனம் உருகி நன்றி கூறியுள்ளார்.

மேலும் சிரஞ்சீவியோடு மட்டுமில்லாமல், பொன்னம்பலத்திற்கு இன்று வரை சரத்குமாரும் உதவி செய்து வருகிறார். கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோர் அவரின் உடல்நிலை சரியானதும் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார்கள். இதனால் பொன்னம்பலமும் எனக்கு அப்பா, அண்ணன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் நான் ரெடிதான். மக்கள் என்னை நிச்சயம் ஏற்பார்கள் என உருக்கமாகவும் கூறியுள்ளார்.