கிடப்பில் கிடந்த சங்கமித்ராவுக்கு உயிர் கொடுக்கப் படுகிறதா?

0
Follow on Google News

சுந்தர் சி தனது கனவுப் படம் என சொல்லி ஆரம்பித்த சங்கமித்ரா தயாரிப்பு நிறுவனத்தின் பொருளாதார காரணத்தால் கைவிடப்பட்டது. பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களால் பல வரலாற்றுக் கதைகள் தென்னிந்திய சினிமாவில் படமாக்கப்பட்டன. அப்படி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படம்தான் சங்கமித்ரா. இந்த படத்தை சுந்தர் சி இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

ஆர்யா, ஜெயம்ரவி, ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசைப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் அதற்குள் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் படாமலேயே கிடப்பில் போடப்பட்டது.

சில மாதங்கள் காத்திருந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளில் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.