ஐபிஎல் மெகா ஏலம்… அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்!

0
Follow on Google News

ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கொரோனாவுக்கு மத்தியில் இரண்டு கட்டங்களாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான தொடர் இந்த ஆண்டு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் அணிகளுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் இணைவதால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகி தொடர் 60 நாளுக்கு மேல் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கும் தொடரின் இறுதிப் போட்டி ஜுன் மாதத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான மெஹா ஏலம் டிசம்பர் 30 ஆம் தேதி அல்லது ஜனவரி முதல்வாரத்தில் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. அதற்குள்ளாக அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பற்றிய தகவலை வெளியிட வேண்டும். இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக அணிகள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் பட்டியலை இன்று இரவுக்குள் அறிவிக்க வேண்டிய நிலையில் இதுவரை அணிகள் வெளியிட்டுள்ள வீரர்கள் பற்றிய தொகுப்பு உங்கள் பார்வைக்கு

• ஆர்சிபி: விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்
• சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா, தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி
• கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்.
• சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கேன் வில்லியம்சன்.
• மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.
• டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பண்ட், அக்சர் படேல், பிரிதிவி ஷா, ஆன்ர்டி நார்ட்யே.
• ராஜஸ்தான் ராயல்ஸ்- சஞ்சு சாம்சன்.