சென்னை மெரினாக் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுப்பு… பின்னணி என்ன?

0
Follow on Google News

சென்னை மெரினாக் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது கடற்கரையாகும். அதிகம் மக்கள் கூடும் கடற்கரையான மெரினாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்காக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

அதனால் அப்போதில் இருந்து அரசுக்கு மெரினா மேல் கண்காணிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மெரினாவில் கூடி போராட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக சந்தேகித்து இன்று மெரினாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.