மொத்தம் 15 கோடி நஷ்டம்… அண்ணாத்த படத்தின் நிலைமை இதுதான்!

0
Follow on Google News

அண்ணாத்த திரைப்படத்தின் மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சுமார் 15 கோடி அளவில் நஷ்டம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்தது சன் பிக்சர்ஸ். இந்த படத்தின் மூலம் வசூலை அள்ள தீபாவளி நாளில் அதிக திரைகளில் ரிலீஸ் செய்தது. முதல் நாளும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் வசூல் அடுத்தடுத்த நாட்களில் படுத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் பெய்த கனமழையால் தியேட்டர்களில் ஈயாடவில்லை. திரையரங்க உரிமையாளர்களே அடுத்த படங்கள் எப்போது ரிலிஸாகும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். படம் ரிலீஸாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இப்போது சுத்தமாக படத்துக்கு பார்வையாளர்கள் இல்லை.

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி வெளியிட்டுள்ள அண்ணாத்த வசூல் நிலவரங்களின் படி சுமார் 183 கோடியில் உருவாக்கப்பட்ட அண்ணாத்த திரைப்படம் 169 கோடி வரைதான் வசூல் செய்துள்ளதாம். அதனால் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தனது அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே ரஜினி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.