அறிமுக போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம்… வாய்ப்பை நழுவ விட்ட ஸ்ரேயாஸ்!

0
Follow on Google News

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். கான்பூர் டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்துள்ளார்.

அறிமுகப்போட்டியிலேயே சதமடிக்கும் 16 ஆவது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆவார். 160 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் மூலம் அவர் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதத்தை நோக்கி நகர்ந்தார்.

இதனால் அறிமுகப்போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 65 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தியா தற்போது வரை 7 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் சேர்த்துள்ளது. 241 ரன்கள் முன்னிலைப் பெற்று களத்தில் அக்ஸர் படேல் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.