அறிமுக போட்டியில் சதம் அடித்த சாதித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

0
Follow on Google News

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் நிதானமாக ஆடிவந்த இந்திய அணி இன்று இரண்டாம் நாளிலும் தொடர்ந்து ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார்.

அறிமுகப்போட்டியிலேயே சதமடிக்கும் 16 ஆவது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆவார். 160 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் மூலம் அவர் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். சற்று முன்பு வரை இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து தொடர்ந்து ஆடி வருகிறது.