கே எல் ராகுலுக்கு செம்ம டிமாண்ட்… 20 கோடி ரூபாய்க்கு ஆஃபர்!

0
Follow on Google News

பஞ்சாப் அணிக்காக ஆடிவரும் கே எல் ராகுலை அடுத்த ஆண்டு ஏலத்தில் கைப்பற்ற செம்ம போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுலுக்குதான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பணமழை கொட்டப் போகிறது. ஏனென்றால் இப்போது அவர் விளையாடிக் கொண்டிருக்கும் பஞ்சாப் அணி அவரைத் தக்கவைக்க வேண்டும் என்றால் 16 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்.

அதனால் அவரை ஏலத்தில் விட உள்ளது. இதனால் புதிதாக உருவாகும் லக்னோ அணிக்காக அவரை எடுத்து கேப்டனாக நியமிக்க வேண்டுமென அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் அவருக்காக 20 கோடி ரூபாய் வரை தர முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரரும் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.