வாலாட்டி சீன வாலில் அனி அடித்து எல்லையில் கட்டிப்போட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி.. ஜி20 மாநாட்டில் சீனாவுக்கு விழுந்த பலத்த அடி..

0
Follow on Google News

ஜி20 மாநாட்டில் சீனாவுக்கு பலத்த அடியை கொடுத்துவிட்டு நாடு திரும்பியிருக்கின்றார் பிரதமர் மோடி, ரோமில் ஜி20 மாநாட்டின் இடையே பிரான்ஸ் அதிபரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசியதில் சீனாவுக்கு எதிராக பசிபிக் கடலில் ஒரு ராணுவ கூட்டணியினை பிரான்ஸ் அமைக்க இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் முக்கிய அழைப்பு விடுக்கபட்டது. இந்தியாவின் ராணுவ கூட்டணி மற்றும் ஆயுதநாடுகளெல்லாம் மாற்றம் நிகழ்துள்ளதை தொடர்ந்து, பிரான்ஸ் இந்தியாவின் நட்பு நாடக மாறியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக மோடி வருவதற்கு முன்பு 100% ஆயுத இறக்குமதிக்கு ரஷ்யாவினை மட்டும் இந்தியா நம்பியிருந்தது, ரஷ்யா பயன்படுத்திய பழைய ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்று கொண்டிருந்தது. மோடி பிரதமராக வந்த பின்பு ரஷ்யா தவிர மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதம் வாங்க தொடங்கியது இந்தியா, இதனால் பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் என பலநாடுகள் இந்தியாவின் நட்பு நாடானது. உலகளவில் பிரான்ஸின் விமான தொழில்நுட்பம் அமெரிக்கா போல் வலுவானது என்பது குறிப்பிடதக்கது.

பசிபிக் கடலில் பிரான்ஸுக்கு ஏகபட்ட தீவுகள் உண்டு, ஒரு காலத்தில் பிரான்ஸ் பிடித்த தீவுகள் அவை, அதனால் தன் நிலபரப்பை காக்க கப்பல்படை கூட்டணி அமைக்கும் அவசியம் அவர்களுக்கும் உண்டு பிரான்ஸ் என்பது ஐரோப்பாவில் மட்டும் இருக்கும் நாடு அல்ல, அதன் தீவுகள் உலகெங்கும் உண்டு,அந்த வகையில் இந்திய கடலில் இருக்கும் தீவுகளை காக்க இந்திய உதவி பிரான்சுக்கு அவசியம் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஏற்கனவே குவாட் அமைப்பில் இருக்கும் இந்தியா, இனி வரும் காலத்தில் பிரான்ஸ் அமைக்கபோகும் அணியிலும் சீனாவுக்கு எதிராக இடம் பெற இருக்கிறது. இரு வலுவான அணிகளில் தன்னை இணைத்து சீனாவினை சுற்றி செக் வைத்து கொண்டிருக்கிறது இந்தியா, காங்கிரஸ் அரசு கடைசிவரை நேருவின் அணிசேரா கொள்கையில் இருந்தது, அதாவது இந்தியா யார் அணியிலும் சேராது, அதனால் இந்தியாவுடன் எந்த நாடுகள் சண்டையிட்டாலும் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன் வராது.

இதனால்தான் 1962ல் நடந்த போரில் இந்தியாவை சீனா வீழ்த்தியது. இப்பொழுதும் இருக்கும் இந்தியா பழைய இந்தியா எந்த அணிக்கும் செல்லாது என நினைத்து சீனா வாலாட்டியது, ஆனால் நாட்டின் பாதுகாப்புக்காக எந்த முடிவினையும் எடுக்க தயார் என அணிசேர்ந்த இந்தியா, சீன வாலில் ஆணி அடித்து எல்லையில் கட்டி வைத்திருக்கின்றது. ரோமில் மிகபெரிய ராணுவ கூட்டணிக்கு அச்சாரமிட்டு வெற்றிகரமான காரியத்தை தேசத்துக்கு தேடிதந்திருக்கின்றார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடதக்கது. – ஸ்டான்லி ராஜன்