370 நீக்கம், ராமர் கோவில், குடியுரிமை சட்டம் தொடர்ந்து அடுத்த அதிரடியை ஆரம்பித்தது இந்தியா.! இதுவும் 70 ஆண்டு பிரட்சனை ..என்ன அதிரடி தெரியுமா.?

0
Follow on Google News

காஸ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோவில்,குடியுரிமை சட்டம் என மிகபெரும் அதிசயங்களை செய்த வந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக மோடி அரசு தற்போது அடுத்த அதிரடிக்கு தயாராகின்றது. இதுவும் 70 ஆண்டுகளாக இழுத்து கொண்டிருக்கும் பிரச்சினை, தேசத்தை ஒரு அச்சுறுத்தலில் வைத்திருக்கும் பிரச்சினை.

இந்தியா இரண்டாக பிரிக்கபட்டபொழுது இந்தியாவில் இருந்து, பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் வீடு, நிலம் உள்ளிட்டவை இந்தியாவில் உண்டு. நியாயமாக அப்படி சென்றவர்களின் சொத்து இந்திய அரசின் சொத்தாகத்தான் கருதபட வேண்டும். ஆனால் பிரிட்டன் வழிகாட்டின் படி இதுவரை அதை பொன்போல் பாதுகாத்து வருகிறது இந்திய அரசு. பாக்கிஸ்தான் நாட்டுக்கு சென்றவர்கள் சொத்துக்களை இந்தியா பாதுகாத்தால் எதிர்காலத்தில் இது எங்கள் சொத்து என பாகிஸ்தானியர் வந்து செல்லவோ இல்லை பெரும் பணம் இந்தியாவிடம் கோரவும் முடியும், இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகும்

இதனால் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்து வந்தது, இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசு.ஆனால் இப்பொழுது பகிரங்கமாக இந்தியாவில் இருக்கும் பாக்கிஸ்தானியர்கள் சொத்துக்கள் விற்கபடும் என மத்திய பாஜக அரசு அறிவித்துவிட்டது, காரணம் இந்த சொத்துக்களின் அரச மதிப்பே 1 லட்சம் கோடி எனும்பொழுது சந்தை மதிப்பு பல மடங்கு என கூறப்படுகிறது. இதில் வில்லங்கமான சொத்துக்களும் உண்டு, அது சீனபோரின் பொழுது அஞ்சி சீனாவுக்கு ஓடியவர்கள் சொத்த்தும் உண்டு,

சீனா அந்த சொத்துக்கள் எங்களுக்கு என சொல்வதும் உண்டு அதைவிட முக்கியமானது மும்பையில் இருக்கும் ஜின்னாவின் பங்களா, பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் பங்களா ஜின்னா அங்குதான் பாக் பிரிவினைக்கு முன் வசித்தார், பின் அந்த பங்களா இந்திய சொத்தானது, ஆனால் பாகிஸ்தானோ அது எங்கள் தேசதந்தையின் அடையாளம் அதை தொடகூடாது என மிரட்டியதில் காங்கிரஸ் அரசும் “ஆகட்டும் சாமி” என பின்வாங்கிற்று.

ஜின்னா பாகிஸ்தான் சென்றாலும் அவரின் மகள் டினா இங்கேதான் இருந்தார் ஆனால் வாடியாவினை திருமணம் செய்து வேறு பங்களாவில் இருந்தார். ஜின்னாவின் மகள்தான் வாடியாக்களின் பாம்பே டையிங் எனும் மிகபெரிய நிறுவணத்தை நடத்தினார், பாகிஸ்தானுக்கும் அக்கம்பெனிக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்தாலும் டினா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. இந்திய தொழில்துறையினை இந்த பாம்பே டையிங் ஆட்டிவைத்த காலம் இருந்தது, ஜின்னாவின் மகளாக இருநாட்டிலும் சலுகைகள் இருந்தன.

அம்பானி எழுந்துதான் பாம்பே டையிங் நிறுவணத்தின் ஏகபோகத்தை ஒழித்து கட்டினார். இப்பொழுது ஜின்னாவின் பங்களா உள்ளிட்டவற்றை ஏலம் விட இந்திய அரசு முடிவு செய்துவிட்டது, இனி எதிரி சொத்து என இங்கே சும்மா இருந்த இடங்களை, அதாவது பாகிஸ்தான் உரிமை கொண்டாடிய சொத்துக்களை கையகபடுத்தி இந்திய அரசுக்கு பயன்படுத்த போகின்றது மத்திய பாஜக மோடி அரசு. இதனால் பல லட்சம் நாட்டுக்கு கிடைக்க போகின்றது, இனி இந்தியாவின் மும்பையில் ஜின்னாவின் அடையாளம் இருக்காது என்பது குறிப்பிடதக்கது. – ஸ்டான்லி ராஜன்