பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடந்த மாற்றம்!

0
Follow on Google News

இயக்குனர் பாலா சிறு இடைவெளிக்குப் பின் படங்களை இயக்க ஆயத்தமாகியுள்ளார். பாலா இயக்கிய தாரை தப்பட்டை மற்றும் நாச்சியார் ஆகிய படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதையடுத்து அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளருக்கே பிடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட பாலா அடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என கடுமையாக உழைத்து இப்போது சூர்யாவை இயக்க உள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. முதலில் இந்த படத்தில் சூர்யா மற்றும் அதர்வா இருவரும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதர்வா விலக்கப்பட்டு சூர்யாவே இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மூன்றே மாதங்களில் நடித்து முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு செல்ல உள்ளார் சூர்யா.