நிலையூர் கண்மாயை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா அரசு அதிகாரிகள்.? தமிழக அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்..

0
Follow on Google News

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் கண்மாய், சுமார் 1500 ஏக்கர் மேல் விவசாய நிலங்களுக்கு இந்த கண்மாய் தான் நீர் பாசனம், வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் இந்த கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு அங்கே இருக்கும் சுமார் 1500 ஏக்கர் மேல் உள்ள விவசாய நிலத்துக்கு தண்ணீர் திறந்துவிட படும். நிலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கண்மாயில் ஒரு பகுதியில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

மதுரை நீர் நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நீண்ட நாட்கள் ஆனாலும் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட திருப்பரங்குன்றம் வட்டார பொதுப்பணித்துறை, மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக சம்பந்த பட்ட அரசு அதிகாரிகள் செயல்படுவதாக அந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது கனமழை காரணமாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட பட்டுள்ளது. இந்த தண்ணீரை நிலையூர் பெரிய கண்மாயில் முழு கொள்ளளவு எட்டும் வகையில் தேக்கி வைத்து, கண்மாய் நிரம்பி இரண்டு கலுங்குகள் வழியாக செல்லும் தண்ணீரை தற்போது விவசாயத்துக்கு பயபப்டுத்தி பின் பெரிய மடை மற்றும் சிறிய மடை வழியாக திறந்துவிட படும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தினால். குறைந்தது இரண்டு போகம் விவசாயம் செய்யலாம்.

ஆனால் கண்மாயை அக்கிரமிக்கப்ட்டுள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு வந்து விட கூடாது என்பதற்காக, கட்டிட அக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்ப விடாமல் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் செயல்படுவதாக நிலையூர் கண்மாயை நம்பி உள்ள விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். கண்மாயின் பெரிய மடை மற்றும் சிறிய மடையில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு அக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடக்களுக்கு பாதிப்பு வராமல் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்ததாக அந்த பகுதி விவசாயிகள் குற்றசாட்டுகளை முன் வைக்கின்ற்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். கண்மாய் முழுவதும் விவசாயிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என நிலையூர் கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.