ஐந்து போலீஸ் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது..! நாங்க என்ன செய்வோம் தெரியுமா.?சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த காடுவெட்டி குரு மகன் கைதாகிறாரா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் OTTயில் வெளியான படம் ஜெய்பீம், தமிழக முதல்வர் உட்பட பலரின் பாராட்டை பெற்ற இந்த திரைப்படம். சில காட்சிகள் வன்னிய சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இடம் பெற்றிருந்ததாக தெரிவித்து, பாமக மற்றும் வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் இருந்து கடும் எதிப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து சில சர்ச்சைக்குரிய காட்சிகள் அந்த படத்தில் இருந்து மாற்றியமைக்கப்பட்டது.

இருந்தும், இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை, பாமக நிர்வாகி ஒருவர் நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதற்கெல்லாம் சூர்யா அஞ்சுவதாக தெரியவில்லை, இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் ஜெய்பீம் விவகாரம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுத, அதற்கு நடிகர் சூர்யா தன் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்கிற தோரணையில் அன்புமணிக்கு பதில் கடிதம் எழுதி கெத்து காட்டினார்.

இதன் பின்பு சினிமா துறையை சேர்ந்த பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும்நிலையில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் பகிரங்கமாக சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், எங்கள் சமுதாய மக்கள் அமைதியாக பொறுமையாக இந்த விவகாரத்தை கையாண்டு கொண்டு இருக்கிறார்கள்.

பழைய மாதிரி இந்த சமுதாய மக்கள் ஒன்று திரண்டு சுமார் பத்தாயிரம் மக்கள், சூர்யா வீட்டின் முன்பு திரண்டால் நடிகர் சூர்யாவால் ஒன்றும் செய்ய முடியாது, ஐந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது, இயக்குனர் ஞானவேலை காப்பாற்றிவிட முடியாது. அதனால் இந்த மக்கள் பொறுமையாக இருக்கின்றார்கள் என்பதற்காக, நீங்கள் பெயர் அரசியல் பண்ண வேண்டாம் என்று தன்மையாக பதில் தருவதாக சொல்கிறார்கள்.

அதிலென்ன தன்மையான பதில் இருக்கின்றது, பெயர் அரசியல் பண்ண வேண்டாம் என்று சொல்கின்ற அவர்கள் வேறு ஒரு பெயரை வைத்து படம் எடுத்திருக்கலாம். அந்த இடத்தில் காலண்டர் அவசியமானதே கிடையாது. சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இதற்குப் பின்பு சூர்யா எந்த படமும் நடிக்க முடியாது எந்த படமும் எடுக்க முடியாது இயக்குனர் ஞானவேல் அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என காடுவெட்டி குரு மகன் கனலரசன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர், பகிரகமாக நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலை மிரட்டல் விடுத்த கனலரசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது என பலர் காடுவெட்டி குரு மகனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.