ரஜினியை மீண்டும் இயக்குகிறாரா கார்த்திக் சுப்பராஜ்?

0
Follow on Google News

பேட்ட படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால் வசூலில் பெரிய தோல்வி இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

அண்ணாத்த படத்தின் குறைவான வசூலால் குறைந்த சம்பளத்தில் சன் பிக்சர்ஸ்க்கே அடுத்த படத்தையும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் தேர்வில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கு பட்ஜெட் அதிகமாக ஆகும் என்பதால் அதைத் தவிர்த்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பேட்ட படத்தை குறைந்த காலத்தில் இயக்கி லாபமான படமாக எடுத்துக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜையே தனது அடுத்த படத்தை இயக்க சொல்லி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளின் போது வெளியாகும் என சொல்லப்படுகிறது.