கேஜிஎப் படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்!

0
Follow on Google News

நடிகர் அமீர்கான் கேஜிஎப் 2 படக்குழுவிடமும் அதன் கதாநாயகன் யாஷிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கேஜிஎப் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தியா முழுவதும் அதிக திரைகளில் வெளியாகிறது.

இந்நிலையில் கேஜிஎப் 2 படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் அமீர்கானின் லால் சிங் சட்டா படமும் ரிலிஸ் ஆவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் பாரஸ்ட் கம்ப்பின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பேசிய அமீர்கான் ‘கேஜிஎப் 2 ரிலீஸ் ஆகும் அதே நாளில் என் படமும் ரிலீஸ் ஆவது குறித்து யாஷிடமும் தயாரிப்பாளரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.