சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு..! பிரேத பரிசோதனையில் பூச்சி மருந்து கண்டுபிடிப்பு..! தூத்துக்குடியில் பரபரப்பு..

0
Follow on Google News

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவர் ஆவார். இவரது மனைவி பெயர் கற்பகவல்லி(34). இவர்களுக்கு சண்முகபாண்டி என்கிற மகனும், தர்ஷினி(7) என்கிற மக்கள் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அந்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சிக்கன்கிரேவி வாங்கி, அவர்கள் வீட்டில் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது லேசான வயிர் எரிச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி கற்பகவல்லி மற்றும் அவரது மகள் தர்ஷினி இருவரும் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லமால் தாய் மற்றும் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து உணவு மற்றும் குளிர்பானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, போலிஸார் கற்பகம் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்ததில், அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கற்பகத்திற்கும், வீரப்பெருமாளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் பின்னர் கற்பகம் வீரப்பெருமாளுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.இதனால் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ, போட்டோவை குடும்பத்தினரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் படம் மற்றும் வீடியோ காண்பித்து விட்டால் அவமானம் ஏற்பட்டு விடும் என்ற கருதிய கற்பகம் சாப்பிட்ட சாப்பாடு அல்லது குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து போலிஸார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் கிரேவி சாப்பிட்டதால்தான் இருவர் உயிரிழந்தனர் என்ற நிலையில், அவர்கள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.