தன்னை பற்றி ஆபாச வீடியோ… பாலியல் கொடூரன் திமுக நிர்வாகி கைது செய்யும்வரை ஓயமாட்டேன்..!காயத்ரி ரகுராம் அதிரடி..

0
Follow on Google News

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த திமுக ஐடி விங் நிர்வாகி ஜெயச்சந்திரன், எதிர்கட்சியில் இருக்கும் பெண் தலைவர்கள் பற்றி ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா குறித்து மிக கீழ்த்தரமாக இவர் ஆபாசமாக பதிவு செய்துள்ளதற்காக போலீசார் கைது செய்த போது, இவருக்கு ஆதரவாக தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் குரல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தனக்காக எம்பி ஆதரவு தெரிவித்தது, மேலும் திமுக நிர்வாகி ஜெயச்சந்திரனுக்கு உற்சாகத்தை பெற்று தந்தது, இதன் பின் கைதாகி விடுவிக்கப்பட்ட அவர் மேலும் தொடர்ந்து ஆபாசமாகவும் இழிவாகவும் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் குறித்து ஒரு ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டு மிக கீழ்த்தரமாக பதிவு செய்திருந்தார் திமுக நிர்வாகி ஜெயச்சந்திரன்.

இது குறித்து போலீஸ் புகார் தெரிவித்த பின்பு காயத்ரி ரகுராம் தெரிவித்ததாவது, ஆபாசமான வீடியோ பதிவை வெளியிட்டு பெண் இனத்தை இழிவு படுத்திய கொடூரன் ஜெயச்சந்திரன் அவர்களின் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரி தக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தார்.

திமுக வில் இதுபோன்ற ஆபாச படங்களை தயாரித்து வெளியிடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க நான் முன்னின்று செயல்படுவேன். இந்தப் பாலியல் கொடூர வன்மனை காப்பாற்ற நினைக்கும் திமுகவை சேர்ந்த எந்த தலைவர் ஆனாலும் நான் தக்க பதில் கொடுப்பேன். அடுத்தது திமுகவை சேர்ந்த குரோம்பேட் ராமலிங்கத்தின் மேல் புகார் அளிக்கப்படும்.

திமுகவை சேர்ந்த தொண்டர்கள் பெண்களை இழிவு படுத்தும் போது வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் திமுக ஆட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். எனக்கு நீதி வேண்டும் ஐடி மாறினாலும், மாறுவேடம் மாறினாலும் ஜெயச்சந்திரனைக் கண்டுபிடித்து சிறந்த தண்டனை நான் வாங்கி கொடுப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.