பண்ணை வீட்டில் பிறந்தநாள் பார்ட்டி… பிளஸ் டூ மாணவி பலாத்காரம்…

0
Follow on Google News

சென்னை வியாசர்பாடியில் உள்ள சத்யா நகரில் சந்தோஷ் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் சந்தோஷின் நண்பருக்கு பிறந்தநாள், அவரது நண்பர் கோவளத்தில் ஒரு வாடகைக்கு எடுத்து பிறந்தநாளை விழா போலக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு சந்தோஷ் அவரது நண்பர்களை அழைத்து சென்றுள்ளார்.

அதில் ப்ளஸ் டூ படிக்கும் அவரது பெண் தோழியையும் சந்தோஷ் அழைத்து சென்றுள்ளார். அந்த தோழி தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர். பண்ணை வீட்டில் கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு இருசக்கர வாகனத்தில் கடற்கரைச் சாலையில் நண்பர்கள் சுற்றக் கிளம்ப, சந்தோஷம் அவரது பெண் தோழியும் மட்டுமே பண்ணை வீட்டில் தனியாக இருந்துள்ளனர். தோழியுடன் ஜாலியாக பேசி நேரத்தை கழித்துக் கொண்டிருந்த சந்தோஷ், இந்தத் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார்.

சந்தோஷ் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தது தெரியாமல் குளிர்பானத்தை குடித்துவிட்டு தோழி தள்ளாட தொடங்கினார். அப்போது சந்தோஷ் அவரை பன்னை வீட்டில் உள்ள அறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோவும் ஆபாசமாக புகைப்படங்களும் எடுத்துள்ளார். போதை தெளிந்து தோழி விழுந்தபோது நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் சந்தோஷ் நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

அதன் பிறகு இரவு தோழியை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டு கிளம்பினார். வீட்டில் இருந்து காலை வெளியே சென்ற மகள் இரவு வீட்டிற்கு வந்தால் தாய் விசாரித்துள்ளார். மேலும் மகள் சோர்வாக திருப்பதி கண்களில் ஆய்வு செய்தபோது தான் மகன் நடந்ததை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். நடந்த இந்த சம்பவத்தில் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தோசை கைதுசெய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாணவியின் பலாத்கார வீடியோ மற்றும் ஆபாச புகைப்படங்களை சந்தோஷிடமிருந்து போலீசார் கைப்பற்றினர். மேலும் சந்தோஷின் நண்பர்கள் மனைவியை பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்ல உடந்தையாக இருந்தார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.