சம்போ சிவ சம்போ பாடல் நடிகையை அம்போ என கைவிட்ட முன்னாள் அமைச்சர்.! நடந்து என்ன.? பரபரப்பு தகவல்….

0
Follow on Google News

சென்னை முன்னாள் அமைச்சர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தற்போது தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாடோடிகள் படத்தில் வரும் காதல் ஜோடியை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டீர்கள், நாடோடி என்ற படத்தில் சசிகுமார், பரணி, அபிநயா, கஞ்ச கருப்பு என்ற பரிச்சயமான பல நடிகர்கள் நடித்திருந்தாலும், சம்போ சிவ சம்போ பாடல் இந்த படத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

காதலுக்கு உதவப்போய் சசி குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும், இந்த படத்தில் காதல் ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் சந்தினி, இவர் நாடோடி படத்திற்கு பின்னர் 2012ஆம் ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தாங்கி வருகிறேன், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த போது அடிக்கடி தொலைபேசியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை தொடர்பு கொண்டதகாவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார், உங்களை போன்ற ஒருவர் வாழ்வில் இருந்தால் என் வாழ்க்கையை அழகாக இருக்கும் என்று என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து நாங்கள், கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம் சென்னையில் இருந்த வரை அவர் இரவில் என்னுடன் தான் தங்குவார், வெளியில் நான் எங்கு சென்றால் கூட அமைச்சரின் வாகனத்தை தான் பயன்படுத்துவேன், நாங்கள் சேர்ந்த பல இடங்களுக்கு சென்றுள்ளோம். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி நான் அவரை வற்புறுத்தினேன், அதற்கு அவர், தனது மனைவியை விவாகரத்து செய்த பின் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

அவரால் நான் கருவுற்ற போல இரண்டு முறை குழந்தை வேண்டாம் என்று கருக்கலைப்பு செய்ய வைத்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று என் மீது பொய் வழக்குகளைப் போட்டு என் வாழ்க்கையை சீரழித்த படுவதாக மிரட்டுவதாக நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார்.