பெங்களூர் சிறையில் ஹரி நாடார்.. போலீஸ் வலையில் சிக்கும் முக்கிய சினிமா நடிகைகள்..!

0
Follow on Google News

நடமாடும் நகை கடை என்று அழைக்கப்படும் ஹரி நாடார், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுமார் 33 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார், திமுக வேட்பாளர் முன்னால் அமைச்சர் பூங்கோதை அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட சுமார் 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மட்டும் தோல்வி அடைந்தார், இவரின் தோல்விக்கு முக்கிய காரணம் திமுக வாக்குகள் பெரும்பாலும் ஹரி நாடார் பிரித்தது தான் என கூற படுகிறது.

இந்நிலையில் குறுகிய காலத்தில் ஹெலிகோப்டேரில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு ஹரி நாடாருக்கு பணம் எங்கே இருந்து வந்தது என பலருக்கு குழப்பம் நீடித்து வந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு உல்லாசமாக இருக்க கேரள சென்ற ஹரி நாடார் அங்கே உல்லாச விடுதியில் மகிழ்ச்சியாக இருந்து வந்த போது, அவரை கர்நாடக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றுள்ளனர்,

கர்நாடகாவில் உள்ள தொழில் அதிபர் ஹரி கிருஷ்ண சாஸ்திரி என்பவரிடம் வங்கியில் 360 கோடி கடன் வாங்கி தருவதாக அதற்கான 2% சதவிகிதம் கமிஷன் 7.20 கோடியை முன் கூட்டியே பெற்றுள்ளார் ஹரி நாடார், ஆனால் லோன் பெற்று தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்த ஹரி நாடாரை தொடர்பு கொண்டு கேட்ட போது முறையான பதில் இல்லை, இதன் பின்பு வங்கியில் இது தொடர்பாக ஹரி கிருஷ்ண சாஸ்திரி விசாரித்ததில் ஹரி நாடார் ஒரு ஏமாற்று நபர் என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசில் ஹரி கிருஷ்ண சாஸ்திரி புகார் தெரிவித்ததை தொடர்ந்து ஹரி நாடார் கைது செய்து விசாரணை செய்ததில் இவர் குஜராத், மஹாராஷ்டிர, கேரளா, ஆந்திர என இந்தியா முழுவதும் பல தொழில் அதிபர்களை கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இவரிடம் கருப்பு பணம் அதிகமாக பரிவர்த்தனை நடந்து வருவதாகவும் சமீப காலமாக சினிமா மோகத்தில் இருந்து வரும் ஹரி நாடார் யாரிடம் பணத்தை கொடுத்து வைத்துள்ளார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது கதநாயகனாக ஹரி நாடார் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார் உடன் சமீப காலமாக மிக நெருக்கமாக இருந்து வருவதால், அவரிடம் பணம் கொடுத்து வைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் ஹரி நாடர் செழிப்பான நபர் என்பதால் அவரிடம் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டால் அவரிடம் இருந்து பணத்தை உருவலாம் என்ற நோக்கில் தான் வனிதா விஜயகுமார் ஜோடி சேர்ந்துள்ளாராம்.

மேலும் சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி உடன் சில நாட்கள் நெருக்கமாக ஹரி நாடார் இருந்து வந்துள்ளார் அதே போன்று, நடிகை விஜயலக்ஷ்மி பண கஷ்டத்தில் இருந்த போது அவருக்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்து அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் ஹரி நாடார் என்று கூறப்படுகிறது, ஆனால் சமீப காலமா வனிதா விஜயகுமார் உடன் பழக்கம் ஏற்பட்ட பின்பு மற்ற நடிகைகளிடம் ஹரி நாடார் தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மோசடி புகாரி சிக்கியுள்ள ஹரி நாடார் பணத்தை எங்கே யாரிடம் கொடுத்து பதுக்கி வைத்துள்ளார் என தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருவதால், போலீசாருக்கு சென்ற தகவலின் படி விசாரணை வளையத்துக்குள் சினிமா நடிகைகளும் சிக்கியுள்ளதாகவும், விரைவில் அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து ஹரி நாடார் விவகாரம் பெரும் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.