ஆம்புலன்ஸில் வைத்து கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரமா.?ஆம்புலன்ஸ் உதவியாளர் கைது.!

0
Follow on Google News

கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஓடும் ஆம்புலன்ஸில் பலாத்காரம் செய்ய முயன்ற ஆம்புலன்ஸ் உதவியாளர். கொரோனாவின் இரண்டாவது அலை கேரளாவையும் விட்டுவைக்கவில்லை. நாளுக்கு நாள் கேரளாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். ஆக்சிசன் தட்டுப்பாட்டால் கேரளா மாநிலமும் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38வயதுடைய இளம்பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெரிந்தல்மண்ணா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்தனர்.

மருத்துவரின் பரிந்துரையின் படி அவரை சில தினங்கள் முன்பு ஸ்கேன் செய்ய தனியார் ஸ்கேன் சென்டருக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸில் அந்த இளம் பெண்ணுடன் உதவியாளர் ஒருவர் சென்று உள்ளார். ஸ்கேன் சென்டருக்கு ஆம்புலன்ஸில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது இளம் பெண்ணுடன் வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் தீடிர் என்று அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போது, ஆம்புலன்ஸ் ஸ்கேன் சென்டருக்கு வந்தடைந்தது.

ஒருவழியாக ஆம்புலன்ஸ் உதவியாளரின் பலாத்கார முயற்சி தப்பிவிட்டார். இது சம்பந்தமாக காவல் துறை வழக்கு பதிவு செய்து உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் கூட இளம்பெண்கள் மீது நடத்தப்படும் பலாத்கார முயற்சியில் குறைந்தபாடில்லை.