என்னை மன்னித்து ஏற்றுக்கொள்.. கையெடுத்து கூம்பிட்ட விஷால்.. வரலக்ஷ்மி என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி இருவரும் 7 வருடங்களாக காதலித்து வந்தனர், இருவரும் பொது நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்வது, திருமணத்துக்கு முன்பே இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் வாழ்க்கை என வசித்து வந்த தகவல் சினிமா துறையில் இருந்தவர்கள் அனைவரும் அறிந்த ஓன்று, நடிகர் சங்க விவகாரத்தில் தனது தந்தை சரத்குமாருக்கு எதிராக விஷால் செயல்பட்ட போதும் கூட தனது காதலில் உறுதியாக இருந்தார் வரலக்ஷ்மி.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால், நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு அந்த புதிய கட்டிடத்தில் என்னுடையை திருமணம் நடைபெறும் என தெரிவித்திருந்தார், இதனை தொடர்ந்து விஷால் – வரலக்ஷ்மி ஜோடி திருமணம் புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் என பரவலாக பேசப்பட்டது, தன்னுடைய வெற்றிக்கு பின்னால் வரலக்ஷ்மி இருப்பதாக வெளிப்படையாகவே பேசினார் விஷால்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் என்ன பிரட்சனை என்று தெரியவில்லை, திடீரென 2016ம் ஆண்டு வரலக்ஷ்மி தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார் அதில், காதலர்கள் பிரிவது இதைவிட மோசமாக இருக்காது, ஒரு நபர் ஏழு ஆண்டு கால காதலை தன்னுடைய மேலாளர் வழியாக முடித்துக் கொண்டுள்ளார் உண்மையான காதல் எங்கே போனது என்று பதிவு செய்து விஷால் அவருடைய மேலாளர் வழியாக வரலக்ஷ்மியை பிரேக் அப் செய்வதாக தெரிவித்த தகவலை தெரிவித்து இருவரும் காதல் முறித்துவிட்ட தகவலை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் வரலக்ஷ்மி.

இதனை தொடர்ந்து விஷாலை பிரிந்த வரலக்ஷ்மி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர், தந்தை சரத்குமார் உடன் ஒன்றாக பொது இடங்களில் காணப்பட்டார். மறுப்பக்கம் நடிகர் விஷால் அவருடன் நடித்த நடிகை லக்ஷ்மி மேனனை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது, பின் அந்த காதலும் முறிவுக்கு வந்தது, இதன் பின்பு அவரது வீட்டில் பார்த்த ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் மகள் உடன் விஷாலுக்கு நிச்சயம் நடைபெற்றது.

ஆனால் இவருடைய நிச்சயதார்த்தம் திருமணம் வரை சென்று பாதியிலே நின்றது, இதன் பின்பு விஷால் திருமணம் பாதியிலே நின்றது குறித்து விஷால் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை, இதனை தொடர்ந்து சமீப காலமாக அவர் நடித்த படங்கள் ஏதும் சரியாக போகவில்லை, அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனம் கடனில் இயங்கிவருவது, நடிகர் சங்கத்தின் இவரின் செயல்பாடுகள் குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என பெரும் பிரச்னையில் விஷால் சிக்கி தவித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷாவை தொடர்பு கொன்டு தனது முன்னால் காதலி வரலட்சுமியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு விஷால் கேட்டு கொண்டதின் பேரில் நடிகை திரிஷா இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார், அந்த சந்திப்பின் போது நான் செய்தது தவறு தான், அதற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், நான் உன் மீது வைத்திருந்த காதல் உண்மை, என்னை ஏற்றுக்கொள் என வரலக்ஷ்மி கையை பிடித்து திரிஷா முன்னிலையில் கெஞ்சியுள்ளார் விஷால்.

ஆனால் வரலக்ஷ்மி தற்போது உன்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை, இந்த ஒரு விஷயத்துக்காக தான் என்னை சந்திக்க நீ அழைத்திருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் நான் இந்த சந்திப்பை தவிர்த்திருப்பேன், காதல் முறிந்தது முறிந்தது தான், உன் வாழ்கை வேறு, என்னுடைய வாழ்கை வேறு என விஷாலை ஏற்க திட்டவட்டமாக வரலக்ஷ்மி மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.