தேவர் சமாதியில் இவனை முட்டி போட வைத்திருக்க வேண்டும்.! இவன் பெரிய சிந்தனை சிற்பி.! ஸ்டாலினை வெளுத்து வாங்கிய ராதாரவி.!

0
Follow on Google News

பாஜக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, சமீபத்தில் நடத்த தேவர் குரு பூஜைக்கு விழாவுக்கு ஸ்டாலினை அழைத்தவர்கள் உண்மையிலேயே தேவர்களா.? அல்லது வேறு யாராவதா.? அவர்கள் உண்மையிலே தேவராக இருந்திருந்தால் நினைவிடத்தில் ஸ்டாலின் விபூதி வைக்காமல் தவிர்த்த உடனேயே, இந்த இடத்தை விட்டு வெளியே போடா என்று விரட்டி இருக்க வேண்டாமா, தேவர் சமாதி முன்பு அவனை முட்டி போட வைத்து இருக்க வேண்டும்.

வீரத்தின் விளை நிலங்கள் நீங்கள், வெறும் மீசை மட்டும் வைத்திருந்தால் போதாது, வீரம் உள்ளே இருக்க வேண்டும், இந்தத் தேர்தலில் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட வேண்டும், நான் உங்களைப் பார்த்து தான் வீரத்தை கற்றுக் கொண்டேன், எனது சொந்தப் படத்தில் தொடங்கும் முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்தை வைத்து தான் படத்தை தொடங்குவேன்,எனக்குப் பிடித்த ஒரு வீரன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா,

சென்ற வருடம் தேவர் குருபூஜைக்கு முதல் நாள் நான் பசும்பொன் சென்றிருந்தேன், யாருக்கும் தெரியாமல் தான் சென்றிருந்தேன், இருந்தும் தேவர் ஜெயந்திக்கு முதல் நாளே அங்கே தேவர் சமாதியின் கட்டுக்கடங்காத கூட்டம், தேவர் நினைவிடத்தில் பெண்கள் குலவையிட்டு கும்பிடுவதை பார்த்து நான் பிரமித்துப் போய் உள்ளேன், அவர் நினைவிடத்தில் அவர் எப்போதும் படுக்கும் திண்ணையை தொட்டு கும்பிட்டேன், அப்படிப்பட்ட ஒரு புண்ணியவான் இடத்திற்கு ஸ்டாலின் போன்ற நாசமாய் போனவனை அழைத்துச் செல்கிறீர்கள் நீங்கள் அவரை அழைத்து போகலாமா.

ஸ்டாலின் பெரிய பகுத்தறிவு சிந்தனை சிற்பி அப்படியே விபூதியை தட்டி விடுகிறார், உனது பெயர் வைக்கப்பட்டது குறித்து நீ பேசியதும் பொய், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இறந்தபோது நீ பிறந்ததால் உனக்கு ஸ்டாலின் பெயர் வைத்ததாக பொய் சொன்னாய், தடுக்கி விழுந்தால் போய், இப்போது ஏழையை காப்பாற்றப் போகிறோம் என்று சொல்கிறாய், எந்த ஏழையை காப்பாற்றப் போகிறார், நீங்க தான் பணக்காரனாய் விட்டீர்களே.

1967 க்கு முன்பு நீங்க எல்லாம் ஏழைடா, 1967 வரை நீங்கள் பிச்சைக்காரன் டா, உன் கணக்கை வெளிய எடுடா,நான் எடுக்கிறேன் டா என் கணக்குகளை. இந்தத் தேவரின மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், தமிழ்நாட்டில் 80 தொகுதி வரை தேவர்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதிகள் இருக்கின்றன, அந்த தொகுதியில் தப்பித்தவறி கூட திமுகவிற்கு ஓட்டுப் போட வேண்டாம், நீங்கள் உண்மையான தேவர்களாக இருந்தால் இதை செய்ய வேண்டும் என ராதாரவி கூறினார்.