திராவிடர் கழகத்துக்கு ஆணியடிக்கப்பட வேண்டும்.!குப்பைத் தொட்டிக்கு மாறுவதில் என்ன பெருமை ??பாடலாசிரியர் தாமரை ஆவேசம்.!

0
Follow on Google News

இந்துக்களில் உள்ளது போலவே இசுலாமிலும் கிறித்தவத்திலும் பகுத்தறிவாளர்கள் தோன்றினால்தான் மூட நம்பிக்கைகள் ஒழிந்த பகுத்தறிவுச் சமூகம் உருவாக முடியும் என பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இசுலாமிய, கிறித்துவ மதங்களில் பெரும் பகுத்தறிவாளர்கள் தோன்றி விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பது திராவிடர் கழகம்தான் என கடுமையாக சாடிய தாமரை.

தமிழ்நாட்டில் இந்து,கிறித்துவ,இசுலாமிய இயக்கங்களுக்குப் பிறகு யாருக்கேனும் ஆணியடிக்கப்பட வேண்டுமென்றால் அது இதுபோன்ற ‘போலிப் பகுத்தறிவாளர்’களை நாளும் பொழுதுமாக வளர்த்தெடுக்கும் திராவிடர் கழகத்துக்குத்தான். ஒரு மதத்தை மட்டும் தாக்கி, மற்ற மதங்களைத் தூக்கிக் கக்கத்தில் வைத்துக் கொஞ்சும் இந்த இயக்கத்தால்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டில் ‘மதச்சார்பின்மை’ என்ற பேரில் ஒரு கேடுகெட்ட நிலை !.

மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு மதத்திலிருந்து வெளியேறுவதுதானே தவிர ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாறுவதல்ல !. ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து இன்னொரு குப்பைத் தொட்டிக்கு மாறுவதில் என்ன பெருமை ?? இசுலாமியப் பகுத்தறிவாளர் சாதிக் சமது, அவரைப் போன்ற, தன்மதத்தை நன்கு கற்றுத் தெளிந்து வெளியேறிய பல இசுலாமியப் பகுத்தறிவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், கெடுகாலமாக அவர்கள் யாரும் இன்னும் பொதுவெளியில் முகம் காட்ட முடியாது. கோவை பாரூக்கின் கதிதான் யாருக்கும் என்பது தெரிந்தே இருக்கிறது.

பெண்கள் எப்படி தோசை சுட வேண்டும், பெண்கள் எப்படிப் படம் எடுக்க வேண்டும் என்று பாடம் நடத்தும் மதிமாறனுக்கு, நேரம் கிடைக்கும்போது மதிமாறன் அவர்களுக்கு தோசை சுடுவது பற்றியும் ‘வெல்டிங்’ செய்வது பற்றியும் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். இரண்டையுமே சிறப்பாகச் செய்வேன். (பிற்படுத்தப்பட்ட சமூகத்துப்) பெண்ணாக இருந்தும் இரண்டுமே கைவரக் காரணம் பெரியாரின் பகுத்தறிவுவழி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

தோன்றட்டும் இன்னும் பற்பல சாதிக் சமதுகள் திராவிடர் கழகம் அல்லாத ஒரு பகுத்தறிவு இயக்கம் தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கப் படவேண்டும். தமிழ்நாடு தப்பிப்பதற்கு அது ஒன்றுதான் வழி !என பாடலாசிரியர் தாமரை தெரிவித்துள்ளார்.