சாய் பல்லவி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் படக்குழுவினர்.! அடேங்கப்பா இத்தனை கோடியா.?

0
Follow on Google News

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி, அந்த படத்தில் ஆசிரியராக நடித்த சாய் பல்லவி ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை நடித்த முதல் படத்திலே பெற்று விட்டார், சாய்பல்லவி அறிமுகமான பிரேமம் படம் வெற்றி பெற்றதால் இதர மொழிகளில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்ததை தொடர்ந்து பிசி நடிகையாக வலம் வர தொடங்கினர் சாய் பல்லவி, தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே, படங்களில் நடித்தார்.

மாரி-2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் மிக பெரிய ஹிட் கொடுத்து சாய் பல்லவிக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய பாராட்டை பெற்று தந்தது, மேலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னனி நடிகை வரிசையில் இடம்பெற்றார் சாய் பல்லவி. மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜுமேனன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிருதிவிராஜ் வேடத்தில்ராணா ஆகியோர் நடிக்கின்றனர்.

சாகர் கே.சந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். இதில் பவன் கல்யாண் மனைவியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகினர். முதலில் படக்குழுவினரிடம் படத்தின் கதையையும் தனக்கு அந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்ற விவரங்களை கேட்டு தெரிந்துள்ளார், பெண் போராளி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அந்த படத்தில் நடிப்பதாக உள்ளது.

மேலும் அந்த படத்தில் சாய் பல்லவிக்கு முக்கிய வேடம் என்பதால் இந்த படம் வெளியான பின்பு தெலுங்கு சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக பட குழுவினர் சாய் பல்லவியிடன் தெரிவித்துள்ளனர். கதை பிடித்து படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சாய் பல்லவியிடம் பட குழுவினர் சம்பளம் குறித்து பேசியுள்ளனர், ஆனால் அவர் கேட்ட சம்பளம் தொகையை நினைத்து சிறிது நேரம் படக்குழுவினர் வாயடைத்து போய் தயாரிப்பு தரப்பில் பேசி தகவல் சொல்வதாக தெரிவித்து வந்துள்ளனர்.

இது குறித்து தெலுங்கு திரையுலகில் விசாரித்ததில் சாய் பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா? என்று படக்குழுவினர் தயாரிப்பு நிறுவனத்திடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.இதே படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.